Friday, February 21, 2014

தேசிய கலாசாரம்

ஒரு குறிப்பிட்ட வரலாற்றுப் பிரிவினருக்கும், கலாசாரத்திற்குமிடையினுள், இணைப்பு என்பது (இனம்,மக்கள்,தேசம், அல்லது கலாசார ஒற்றுமையம்சம் கொண்ட மக்கள் குழுக்கள்) கலாசாரத்திற்கு ஒரு பிரத்தியேகமான வடிவத்தைக் கொடுக்கிறது. அது ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்புடன் உள்ள இணைப்பைக் காட்டுவதாக உள்ளது. அதனுடைய வர்க்க நலன்கள் பிறவற்றையும் காட்டுவனவாக இருக்ககூடும்; முரண்பாடுள்ள சமுதாயத்தில், பல நியதிகளும், தராதரங்களும் ஆதிக்கத்தில் இருக்கக் காண்கிறோம். அவை அதிகார ஆதிகத்திலுள்ள வர்க்கத்தின்  நலன்களுக்கு ஏற்றனவாகவே உள்ளன. இதற்கு நேர்மாறாக, எதிரிடையான, தனக்கே உரித்தான லட்சிய அமைப்புகளையும், நியதிகளையும், நியாத்தீர்ப்புகளையும், பழக்கவழக்கத்திற்கான கோட்பாடுகளையும் ஒடுக்கப்பட்ட வர்க்கம் உருவாக்கிக் கொள்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில் லெனின் கூறுவதை சுட்டிக்காட்டிலாம். “சுரண்டல் சமுதாய அமைப்புள்ள எந்தவொரு நாட்டிலும், அதன் தேசியக் கலாசாரத்தில் இரண்டு வகையான கலாசாரங்கள் இருக்கும். ஆளும் வர்க்கத்தின் கலாசாரம் என்ற ஒன்றும், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் நலன்களோடு இணைப்புக் கொண்ட ஜனநாயக சோஷலிச தன்மைகள் கொண்ட இன்னொன்றுமாக இருக்கும்’’

இந்த லெனினியக் கோட்பாடு, கலாசாரத்தைப் பற்றிய சித்தாந்தத்தை மிகத் தெளிவாக, துல்லியமாகக் கூறுகிறது. இது சீர்திருத்தவாதிகளாலும், வலதுசாரி திரிபுவாதிகளாலும் தாக்கப்படுகிறது. அவர்கள் பூர்சுவா கலாசாரத்தை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர். ஏனெனில், கலாசாரத்தைப் பற்றிய  வர்க்கக் கண்ணோட்டத்தை மேற்கொள்ள இவர்கள் தவறிவிட்டனர். வர்க்கக் கண்ணோட்டம் இல்லாது, இதுவரை இருந்த பூர்சுவா கலாசாரத்தைக்கூட நாம் ஜீரணித்துக் கொள்ள வேண்டிய பிரச்சனையையும் இவர்கள் சந்திக்காமல் நழுவப் பார்க்கிறார்கள்.

தொழிலாளி வர்க்கம், பிற்போக்குக் கலாசாரத்தை நிராகரிக்க வேண்டும். பூர்சுவா ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான இயந்திரங்களைப் பயன் படுத்துவதை நியாயப்படுத்தக்கூடிய கலாசாரத்தையும் நிராகரிக்க வேண்டும். ஆனால், சகல நியாயமான கலாசார சாதனைகளும் உலகு தழுவிய மனிதகுல கலாசாரத்தை சோஷலிச சமுதாயத்தைப் படைப்பதற்காக முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
எனவேதான் இளைஞர்களிடம் பேசுகிறபோது லெனின் மனிதகுலம் கலாசாரப் பாரம்பரியமே ஆகும். இது புதிய கலாசாரத்தை-சோஷலிச சமுதாயத்தைப் படைப்பதற்காக முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
       
        எனவேதான் இளைஞர்களிடம் பேசுகிறபோது லெனின் “மனிதகுலம் படைத்த அறிவுச் செல்வம் அனைத்தையும் கொண்டு உனது மூளையைச் செழுமைப்படுத்திக் கொண்டால்தான், நீ ஒரு கம்யூனிஸ்டாக முடியும்” என்று கூறினார்.
-    வி.கெல்லி,எம்.கவல்ஸோன்
-    தமிழில் : தா.பாண்டியன்
(நன்றி : நியூ செஞ்சுரியின் சிறுநூல் வரிசை
‘சமுதாயமும் பண்பாடும்’ எனும் நூல்)

       
       
       
       
       
       
       


கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் நூல் அறிமுக அரங்கம்

            விருதுநகர்: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் நூல்கள் அறிமுக அரங்கமும் படைப்பரங்கமும் நடைபெற்றது.
            விருதுநகர் அருகிலுள்ள ஆர்.ஆர்.நகரில் தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம் விருதுநகர் கிளையின் சார்பில் நூல்கள் அறிமுக அரங்கமும் படைப்பரங்கமும் நடைப்பெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் இரா.பாலச்சந்திரன் தலைமை வகித்தார். கிளைச்செயலாளர் கவிஞர் நீலநிலா செண்பகராஜன் வரவேற்றார்.
            விடுதலைப் போராளி ஜி.ராமசந்திரன் ‘சுயசரிதை, கட்டுரை மற்றும் ஆவணங்கள் என்ற நூலை இரா.பாலசந்திரன் எழுதி உள்ளார். நூலை அறிமுகம் செய்து சாத்தூர் கிளைசெயலாளர் எஸ்.பழனிக்குமார் பேசுகையில், தலைவர் பி.சீனிவாசராவை சந்தித்து விவசாய சங்கம் துவக்க எடுத்த முயற்சி, இராஜபாளையம், வத்திராயிருப்பு மாநில மாநாடு நடத்த துணை நின்ற பின் இராமநாதபுரம் சதி வழக்கில் சேர்க்கப்பட்டு சிறையில் இருந்தது ஆகியவற்றை படிக்கும்போது உண்மையிலேயே நமது காலப் பணிகள் எல்லாம் மிகச் சுலபமாகத் தெரிகிறது. 14 வயதில் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டு சிறை சென்றிருக்கிறார். அவரது சகோதரி ஜி.நாராயணம்மாள் தமிழ் நாட்டில் இரண்டாவது பெண் தனிநபர் சத்தியாக் கிரகியாக பாடுபட்டுள்ளார். ஜிரா.ராமசந்திரன் மனைவி தலைவர்களுக்கு  கூரியராகவும், உணவு அளித்தும் தலைமறைவு வாழ்க்கையில் செயல்பட்டதை படிக்கும் பொழுது உண்மையிலேயே நம்மை உணர்ச்சிவயப்பட வைக்கிறது. அனைவரும் வாங்கி படிக்க வேண்டும் என்றார்.
             ‘இராமலட்சுமியின் வாக்குமூலம்’ குறு நாவலை கவிஞர் பஸிரா ரசுலும் மற்றும் கந்தகக்கவி பாண்டூவும், ‘மௌனம் பேசும் வார்த்தைகள்’ கவிதை நூலை சிவகாசி கிளை பொருளாளர் அ.கி.முருகன் ஆகியோர்கள் அறிமுகப்படுத்திப் பேசினார்கள்.
            படைப்பரங்கில் மாவட்டத் தலைவர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி சிறுகதையையும், குருவிக்கூடு கவிதை நூலை எழுதிய கவிஞர் ராதா மணிக்குமார் கவிதையையும் கந்தகக்கவி பாண்டு, சாத்தூர் வ.நவனீத கிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள். சேலத்திலிருந்து வெளிவரும் சிற்றிதழ் தாரணி அறிமுகப்படுத்தப்பட்டது. பொம்மை நாகராஜன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் தீனதயாளி, ஆர்.ஆர்.நகர் சி.பி.ஐ பொறுப்பாளர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக படைப்பரங்கத்தில் சிறுகதையாளர் ஸ்வரமஞ்சரி தலைமையுரை நிகழ்த்தினார்.
ஜனசக்தி

04-02-2014

Tuesday, February 11, 2014

பெரியாரால் உருவாக்கப்பட்டவர்களே...

                பெரியாரால் உருவாக்கப்பட்ட பெரிய பேச்சாளர்கள் தமிழகத்தை அனேகமாகக் கடந்த நாற்பது ஆண்டுகாலமாகத் தம்முடைய நாவால் ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், அத்தனை பேரையும் பேச வைத்த பெரியார் தமக்கென மேடைகென்றே ஒரு பாணியை அமைத்துக் கொண்டு பேசியதே இல்லை. அவரால் பயிற்றுவிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு பாணி-முறை உண்டு. நான் பேசுகின்றேன் என்றால் எனக்கென்று ஒரு பாணி, ஒரு முறை. நண்பர் வீரமணி அவர்களுக்கு ஒரு பாணி, ஒரு முறை. கலைஞர் கருணாநிதி, அவர்களுக்கென்று ஒரு தமிழ், ஒரு நடை, ஒரு முறை. காலஞ்சென்ற அண்ணா அவர்களுக்கு என்று ஒரு நடை, ஒரு முறை-இப்படி எல்லாம் உண்டு.

அவரின் பேச்சு முறை :
தந்தை பெரியார் அவர்களுக்கு என்ன? நேரிலும் மேடையிலும் எல்லாம் ஒரு தமிழ், ஒரு நடை, ஒரு பேச்சுத்தான்! மேடைக்கு என்று ஒரு தமிழ், அதற்கு என்று இழுத்துப் பிடித்த எதுகை, மோனையெல்லாம் அவரிடம் இல்லை. ஏன்? ஏன்? அவருடைய ஒரே நோக்கம், மக்களிடத்தில் உண்மையைச் சொல்ல வேண்டும்; அது நெஞ்சில் பதிகின்றாற்போல் சொல்ல வேண்டும். அது கடைசி மனிதனுக்கும் புரிய வேண்டும். சாயம் பூசி, அழகுபடுத்தி அதை ஒரு புலமைக் கலையாக மாற்றக்கூடாது என்பதாகும். தமிழ் நாட்டினுடைய கடைசி மனிதனைத் தூக்கிவிடுவது தான் அவருடைய கடைசி குறி. ஆகவேதான் அவருடைய மேடைப்பேச்சு பூராவும் கடைசி வரைக்கும் இந்த முறையில் அமைந்திருந்தது. வீட்டிலும் வெளியிலும் இயற்கையாகவே என்ன பேசுவாரோ அவையேதான் மேடைப்பேச்சிலும் அமைந்து இருந்தன.

மனோதத்துவவாதிகள் கருத்து :
                மேல் நாட்டில் சைக்காலஜி – மனோதத்துவத்தை ஆராய்ந்தவர்கள் சொல்லுகின்றார்கள்; “யார் வீட்டிலும் வெளியிலும் மேடையிலும் இயற்கையாகவே பேசுகின்றார்களோ, யார்-தாம் நினைக்கின்றபடி, அடுத்தவனுக்குப் புரிகின்றபடி எழுதுகின்றார்களோ அவர்கள் மனத்தில் கள்ளம் கபடம் இல்லாதவர்கள்; நேர்மை உடையவர்கள்; அவர்கள் மனிதனை மனிதனாகவே பாவித்து எந்தப் பலனையும் எதிர்பாராது பேசுகின்றவர்கள்; எழுதுகின்றவர்கள் என்று”. அதிகக் கைத்தட்டினை உங்களிடம் இருந்து வாங்கவேண்டும் என்பதற்காக அபிநயத்தோடு ஒரு நாடகப் பாணியில் பெரியார் அவர்கள் பேசவில்லை காரணம், அவர் உங்கள் கைத்தட்டினை எதிர்பார்க்கவில்லை என்பதுதான் அதற்குப் பொருள் கேட்பவர்களைக் கெடுத்த பேச்சாளர்கள் தமிழ்நாட்டில் மிக அதிகம் வேண்டாத இடத்தில் கைதட்டி, வேண்டாதவர்களைக் கைத்தூக்கிவிட்டு, என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து, இன்றைக்கு வேண்டாத தமிழகமாக ஆக்கியாகிவிட்டது. ஆனால், பெரியார் அவர்களைப் பொருத்தவரை நீங்கள் கைதட்டினாலும் சரி, நீங்கள் கூட்டத்தில் இருத்து இறங்கிப் போனாலும் சரி, அவர் தாம் சொல்லுகின்றதைச் சொல்லிக் கொண்டே இருப்பார்.
  
வடசென்னையில்... :
                நான் வட சென்னையில் ஒரு சமயம் அவர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் உட்கார்ந்து, அவரது பேச்சினைக் கேட்டேன். கூட்டத்தினைப் பார்த்துச் சொன்னார். “இவ்வளவு முட்டாள்களும் தமிழ்நாட்டில் இருப்பது என்பது ரொம்ப நல்லது. இப்படி எல்லாம் நீங்கள் முட்டாள்களாக இல்லாது இருந்தால் 40 வருடத்திற்குப் பின்பும், இப்படி வந்து உட்கார மாட்டீர்கள்; நான் சொல்லித்தான் பார்க்கிறேன், உங்களுக்குப் புரியவில்லை. ஆகவே மேலும் சொல்லுகின்றேன்’’ என்று சொன்னார்.

அவர் ஒருவர்தான் அப்படிச் சொல்லலாம் :
                யாராவது கூட்டத்தினைக் கூட்டி வைத்து “நீங்கள் எல்லாம் முட்டாள்கள்’’ என்று சொன்னால் விடுவார்களா? அவர் ஒருவர்தான் அப்படிச் சொல்லலாம். அவரைப் பின்பற்றி நான் சொன்னால் கல் வந்து விழும். பெரியார் ஏன் சொல்லுகின்றார்? சொல்லுகின்ற உரிமை அவருக்கு உண்டு என்பதைத் தமிழகம் ஏற்றுக்கொண்டு உள்ளது. இதயத்தின் மொழி அது; வாயும், மூளையும் கற்பிக்கின்றமொழி அல்ல. அது யாருக்கு வரும்? இந்த மனித சமுதாயத்தை விடுவிக்க வேண்டும் என்ற ஆவல் யாருக்கு உந்தித் தழைக்கின்றதோ அவருக்குத்தான் அந்த மொழியே வரும் எழுத்திலும் பேச்சிலும்!
தா.பாண்டியன்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
(நன்றி: நியூ செஞ்சுரியின் சிறுநூல் வரிசை ‘பெரியார் என்னும் ஆளுமை’ எனும் நூல்)
நன்றி : ஜனசக்தி – 29.01.2014


               
       
       


Monday, February 10, 2014

ம.சிங்காரவேலர் பிறந்தநாள் இன்று...

சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலனாரின் 

153 ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள் (18.02.2014).


நிழலில் இருப்பவனுக்கு வெயில் கஷ்டம் தெரி யாது. புளிச்சயேப்பக்காரனுக்கு அகோர பசியின் கொடுமை விளங்காது. தரித்திரத்தில் வாழும் ஏழை கூலியின் தவிப்பு ஒய்யார உல்லாச வாழ்வில் புரளும் முதலாளிகளின் கடின சிந்தனையில் படாது
இந்திய சுதந்திரப் புரட்சியாளர்களிலே மூத்தவர் மட்டுமல்லமுதிர்ந்தவர் ம.சிங்காரவேலர். சிலரே இவரினும் மூத்தவர்கள். அண்ணல் மகாத்மாகாந்திஷ்யப் புரட்சி வீரர் லெனின்இவர்களினும் மூத்தவர் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர். 18-2-1860ல் பிறந்த இந்த மேதை 1946 பிப்ரவ இவர் மறைவை இராஜாஜி அவர்கள் சுதந்திரப் பித்தரும்,யோக்கியர்களில் ஒருவரும் மறைந்தார்” என்று குறிப்பிட்டார்.
இதனால் ம.சிங்கார வேலரின் ஒழுக்கமான அரசியல் செயல் பாட்டை நாம் புரிந்து கொள்ள முடியும்.

வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்பட்ட நேரத்தில் சிங்காரவேலரை-புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர் என்று பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டார். சிங்காரவேலர் இந்தியா சுதந்திரம் பெறுவ தற்குஓராண்டிற்கு முன்னமேயே மறைந்தார். செய்திகளை வகைதொகைப்படுத்திச் சொல்வதில் ம.பொ.சி விற்பன்னர். இந்தியாவில் உருவாகிய இயக்கங்கள் நான்கு. இந்திய தேசிய காங்கிரஸ்சம தர்ம இயக்கம்,சுயமரியாதை இயக்கம்தொழிற்சங்க இயக்கமென நான்கு. இந்த நான்கு இயக்கங்களிலும் நீக்கமறநெருக்கமாக இடம்பெற்றவர் சிங்காரவேலர் மட்டுமே” என்பார் ம.பொ.சி. தொழிற்சங்கங்கள் தந்த சிங்கார வேலர் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் ம.சிங்காரவேலர் ஆவார். பகுத்தறிவு இயக்கத்தில் ஈ.வெ.ரா.வுடன் தோளோடு தோள் கொடுத்து நின்றவர். பொதுவுடைமை இயக்கம் இந்தியாவில் வேரூன்றக் காரணமாக இருந்த மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர். தொழிற்சங்க இயக்கத்தை முதன்முதலாக இந்திய அளவில் உருவாக்கிய முன்னோடி. சென்னை மாநகராட்சிப்பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் காமராசருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

உழைப்பாளர் தினமான மே தினத்தை இந்தியாவிலேயே - ஏன் ஆசியாவிலேயே - முதன்முறையாகக் கொண்டாடிவழிகாட்டியாகத் திகழ்ந்தவர். உடன் உழைக்கும் இயக்கத்தவர்களை தோழர் என்று முதன்முதலாக அழைத்தவர். இப்படிப் பல விஷயங்களில் தேசிய அளவில் முன்னோடியாக விளங்கியவர் தோழர் ம. சிங்காரவேலர்.தமிழகத்தையே உலுக்கிய நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர்கள்போராட்டத்தை பத்து மாதங்களுக்கும் மேலாக முன்னின்று நடத்தியவர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு கான்பூரில் நடைபெற்றபோது அதனைத் துவக்கி வைத்தார்.

கயா காங்கிரஸ் மாநாட்டில் சிங்காரவேலர் பங்குகொண்டது வரலாற்றுப் புகழ்மிக்க நிகழ்ச்சியாக மதிக்கப்படுகிறது. அவர் உரைநிகழ்த்தும்போது கூட்டத்தினரை ‘‘காம்ரேட்ஸ்’’ என்று அவர் அழைத்தது அனைவரையும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் அவர் காங்கிரஸ்காரர்களால் காம்ரேட்’ என்றே அழைக்கப்பட்டார். மரியாதையும் முக்கியத்துவமும் நிறைந்த தலைவர்கள் என்னும் மேன்மை பறிபோய்விடுமோ என்றும்பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நடவடிக்கை எடுத்துவிடுமோ என்று இளம் தலைமுறையினரே பயந்து நடுங்கிக்கொண்டிருந்த வேளையில் அறுபது வயதைத் தாண்டிய முதியவர் தன்னை மிகவும் துணிச்சலுடன் ‘‘நான் ஒரு கம்யூனிஸ்ட்’ என்று அழைத்துக் கொண்ட துணிச்சலை அங்கு வியந்து பாராட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று 1923இல் வேன்கார்டு இதழில் எம்.என்.ராய் பதிவு செய்திருக்கிறார்.தமிழன் இன்னொரு தமிழனுடன் தமிழில்தான் பேசவேண்டும். தமிழ்நாட்டு அரசியல் தமிழில்தான் நடைபெறவேண்டும். தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் என்று போராடியவர்களில் முதன்மையானவர். மிகுந்த போராட்டங்களுக்குப்பிறகு சென்னை மாநகராட்சிக் கூட்டங்கள் தமிழில் நடக்க வழிவகுத்தவர்.

1917இல் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்த சிங்காரவேலர்இயக்கப் பாடல்களைப் பாடியும் பிறரைப் பாட வைத்தும் மக்களை அணிதிரளச் செய்தார். 1918இல் ரௌலட் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோதுஅதைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் பொதுக் கூட்டங்களும் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த ஏற்பாடுகளில் முக்கியப் பங்கு வகித்தவர் சிங்காரவேலர். போராட்டங்களை நடத்துவது சிங்காரவேலருக்கு நிலாச்சோறு சாப்பிடுவதுபோல’ என்று அண்ணா ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

1919ஆம் ஆண்டில் ஜாலியன்வாலாபாக்  வெறியாட்டத்தைக் கண்டித்துஅவர் தமிழகத்தில் நடத்திய கடையடைப்புப் போராட்டம் முழு வெற்றியடைந்தது. சின்னச் சின்ன இட்லிக்கடைக்காரர்களும்இறைச்சிக் கடைக்காரர்களும்கூடத் தங்கள் கடைகளை அன்று திறக்கவில்லை. எதிர்ப்பைக் காட்டும் விதத்தில் தன்னுடைய வழக்கறிஞர் தொழிலின் அடையாளமான கருப்புக்கோட்டினை தெருவில் எரித்தார். அதன்பின் அவர் வழக்கறிஞர் தொழிலையே கைவிட்டுவிட்டார்.உத்தரப்பிரதேசம் கோரக்பூர் மாவட்டத்தில் சௌரிசௌரா என்னும் ஊரில் விவசாயத் தொழிலாளர்கள் நடத்திய பேரணியின்மீது காவல்துறையினர்துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பேரணியில் வந்தோர் காவல்துறையினரைத் திருப்பித்தாக்கிகாவல்நிலையத்திற்குத் தீ வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு சென்னையில் நடைபெற்றது. வழக்கின் முடிவில் பலருக்கு மரண தண்டனைவிதிக்கப்பட்டது. இச்சம்பவத்தைக் காரணமாக வைத்து காந்தி ஒத்துழையாமை இயக்கத்தையே நிறுத்திவிட்டார். அதனைக் கண்டித்து சிங்காரவேலர் மிக நீண்ட கட்டுரையொன்றை இந்து நாளிதழுக்கு எழுதினார். ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி தொடங்கியபோது சிங்காரவேலர் காந்திக்கு எழுதிய கடிதத்தில் ‘‘நான் இன்று எனது வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டேன். நாட்டின் மக்களுக்காக உங்களின் போராட்டத்தில் பங்கேற்கிறேன்’’ என்று எழுதியிருந்தார்.

ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி முடித்தபோது அதனைக் கண்டித்தும் காந்திக்கு சிங்காரவேலர் கடிதம் எழுதினார்.தமிழகத்தில் முதன்முறையாக தொழிற்சங்கத்தை நிறுவிய பெருமை சிங்காரவேலரையே சாரும். திருவிகசக்கரைச் செட்டியார் ஆகியோர் தோளோடு தோள் நின்று இவருக்குத் துணை புரிந்தனர். சென்னை தொழிலாளர் சங்கம்நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர் யூனியன்கோவை நகரத் தொழிலாளர் சங்கம்மின்சாரத் தொழிலாளர் சங்கம்மண்ணெண்ணெய் தொழிலாளர் சங்கம்அச்சுத் தொழிலாளர் சங்கம்அலுமினியத் தொழிலாளர் சங்கம் போன்று பல்வேறு தொழிற்சங்கங்களை தொடங்கினார்.

ஒவ்வோராண்டும் ஏப்ரல் 6 - 13 தேதிகளில் தேசிய வாரம் என்ற ஒரு வாரத்தைக் கொண்டாடி வந்தார். இறுதி நாளான ஏப்ரல் 13 அன்று சென்னைக் கடற்கரையில் மாபெரும் கூட்டம் நடைபெறும். 1925ஆம் ஆண்டுசென்னையில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் 13வது வட்டம் யானைக்கவுனி பகுதியிலிருந்து அதிக வாக்குகள் வித்தியாசம் பெற்று நகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆங்கிலத்தில் அதிகப் புலமை பெற்றிருந்தும் நகரசபைக் கூட்டங்களில் தமிழிலேயே பேசினார். அலுவலகங்களில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்தார். அதேசமயத்தில்  தனிப்பட்ட முறையில் ஜெர்மன்பிரெஞ்சுஇந்தி முதலிய மொழிகளைக் கற்றுக்கொண்டார்.

சென்னையில் நடைபெற்ற ஒரு தொழிலாளர் போராட்டத்தில் ஏழு பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோனார்கள். அவர்களின் சவ ஊர்வலத்தில் சிங்காரவேலரும் கலந்துகொண்டார். சவஊர்வலத்தில் சென்ற சிங்காரவேலரை குறிபார்த்து காவல்துறையினர் துப்பாக்கியை உயர்த்தினார்கள். அவர்களுக்குத் தன்மார்பை நிமிர்த்துக்காட்டித் தன்னைச் சுடுமாறு சிங்காரவேலர் சொன்னார். இச்சவஊர்வலம் குறித்து குடியரசு இதழில் அவர் எழுதிய கட்டுரை மிகவும் பிரசித்தி பெற்றது.1943ஆம் ஆண்டு ஜூன் 20 அன்று சென்னையில் தீண்டாமை ஒழிப்பு நாள் கொண்டாடப்பட்டது. அதில் தள்ளாதவயதிலும் சிங்காரவேலர் தந்தை பெரியாருடன் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அச்சுத் தொழிலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு தலைமை தாங்கி உரையாற்றினார். அதுவே அவர் கலந்து கொண்ட இறுதி பொது நிகழ்ச்சியாகும்.அந்தக்கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘‘இப்போது எனக்கு வயது 84. எனினும் தொழிலாளர் வர்க்கத்துக்கு என் கடமையைச் செய்ய முன்வந்துள்ளேன். உங்களில் ஒருவனாக இருப்பதைக் காட்டிலும் மற்றெதை நான் விரும்பமுடியும். உங்கள் மத்தியில் இறந்தாலும் அதைவிட எனக்குக் கிடைக்கக்கூடிய பாக்கியம் வேறு என்னவாக இருக்க முடியும்’’ என்று உருக்கமாகப் பேசினார்.அவரும் அவருடைய முன்னோர்களும் ஈட்டிய சொத்துக்களின்மதிப்பு அந்நாளிலேயே சுமார் 200 கோடியாகும்.

அந்த திரண்ட சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்த அந்த மாமேதை இறுதிவரை ஏழைத் தொழிலாளர்களுடனேயே வாழ்ந்தார். தன் சொத்துக்களைத் தன் காலத்திலேயே அறக்கட்டளை அமைத்து பல அறப்பணிகளை நடத்தி வந்தார்.

மிகத் திரண்ட சொத்துக்களை உள்ளடக்கியதும் சிங்காரவேலரின் முன்னோர்களால் நிறுவப்பட்டதுமான எம்கேஏ சாரிடீஸ் தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அறக்கட்டளை வழியாகசிங்காரவேலரின் மருமகள் பத்மா சத்தியகுமாருக்கு தமிழக அரசு மாதா மாதம் தவறாமல் உதவித் தொகை அனுப்பி வருகிறது. ஆனால் உதவித் தொகையின் அளவு வெறும் ரூ.50 என அறிகிறோம். அத்தொகை உயர்த்தப்பட்டதா என்பது தெரியவில்லை...

நன்றி : http://rajaphilipsingarayar.hpage.co.in/_75761294.html

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள் இன்று..


பிப்ரவரி 11: ஒளி விளக்கு, திரைப் படக்கருவி போன்ற பல கருவிகளை உருவாக்கிய தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள் இன்று..

தாமஸ் ஆல்வா எடிசன் இளம் வயதில் பள்ளிக்கு வெகு சில நாட்களே போனார். ஒரு நாள் வகுப்பை விட்டு வரும் பொழுது அவரின் பாக்கெட்டில் ஒரு துண்டு சீட்டு இணைக்கப்பட்டு இருந்தது. அதை அவரின் அன்னை எடுத்து பார்த்தார். கண்களில் நீர் முட்டிக்கொண்டது. "டாமி படிக்க லாயக்கில்லை ! வீட்டிலேயே வைத்துக்கொள்ளவும் !" என்று அந்த கடிதம் சொன்னது.

வீட்டில் அன்னையே எடிசனுக்கு ஆசிரியை ஆனார். டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டு பள்ளியில் படிக்க லாயக்கில்லை என துரத்தப்பட்ட எடிசன் அன்னையின் அரவணைப்பில் கல்வி கற்றார்.

உள்நாட்டு போர் நடந்த பொழுது சுடசுட செய்திகளை தொடர்வண்டியிலேயே அச்சிட்டு விற்றார் .ரயிலில் ஆய்வு செய்து கொண்டிருந்த பொழுது ஒரு பெட்டியில் தீ பற்றிக்கொண்டதற்காக ரயில்வே மாஸ்டரிடம் அறை வாங்கி ஒரு
பக்கம் கேட்கும் திறனை இழந்த எடிசன் தன் ஓயாத உழைப்பால் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கினார்.

ஊமைப்படங்களை பேச வைக்கும் போனோக்ராஃபை ஆய்வகம் தீப்பிடித்து எரிந்த ஒரு வாரத்தில் உருவாக்கி காட்டினார். குண்டு பல்பின் இழைக்காக மலேசியா வரை ஆளை அனுப்பி பொருட்களை தேடிப்பார்த்தார். பத்தாயிரம் முறை தேடியும்
பொருள் சிக்கவில்லை ,"நான் பத்தாயிரம் முறை தோல்வியடைந்தேன் என சொல்ல மாட்டேன் ;பத்தாயிரம் பொருட்களில் இருந்து பல்பை ஒளிர வைக்க முடியாது !என கற்றுக்கொண்டேன் என்றார்.எடிசன் இறுதியாக பல்பை டங்ஸ்டனை கொண்டு ஒளிர வைத்தார் .

அதை சாதித்த பொழுது நள்ளிரவு .மனைவியிடம் ஆர்வமாக காண்பித்த பொழுது ,"நடுராத்திரியில் தூக்கத்தை கெடுத்துக்கிட்டு ;கண்ணு கூசுது விளக்கை அணையுங்க !" என்றார் .அவர் எப்படி மற்ற கண்டுபிடிப்பாளர்களில் இருந்து தனித்து நிற்கிறார் என்றால் தான் கண்டுபிடித்ததை வெற்றிகரமாக அவர் சந்தைப்படுத்தினார்.

காய்கறி விற்பனை,செய்தித்தாள் விற்றல் ,பள்ளியை விட்டு மூன்றே மாதத்தில் வெளியேற்றம் என விரக்தியான வாழ்வில் 1,093 காப்புரிமைகளை பெற்று இருந்தார் என்பதற்கு பின் எத்தகு உழைப்பு இருக்கும் என உணர வேண்டும் . வாழ்க்கையில் வலிகள் மிகுந்திருந்த பொழுது ஓயாத உழைப்பை கொட்டிய அவர் வெற்றியை ஓயாத உழைப்பே தீர்மானிக்கிறது என அடித்து சொன்னவர் .

ஒன்றுக்கும் உதவாத எடிசன் எனப்பட்டவர் மறைந்தார்;அமெரிக்காவில் விளக்குகள் சிலநிமிடம் அணைந்தன .ரேடியோ கரகரத்தது,"எடிசன் வருவதற்கு முன் உலகம் இப்படித்தான் இருந்தது !" மீண்டும் விளக்குகள் ஒளிர்ந்து ஊரே மின்னியது ரேடியோ சன்னமாக சொன்னது ,"எடிசன் பிறந்ததற்கு பின் உலகம் இப்படித்தான் இருந்தது !".அவரின் அம்மா எனும் ஆசிரியரால் வார்க்கப்பட்ட அந்த வெளிச்ச நாயகன் போராட்ட இருட்டில் மூழ்கி இருக்கும் எல்லாருக்கும் தன்னம்பிக்கை 

-பூ.கொ.சரவணன்
பிப்ரவரி 11:
 ஒளி விளக்கு, திரைப் படக்கருவி போன்ற பல கருவிகளை உருவாக்கிய தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள் இன்று..

தாமஸ் ஆல்வா எடிசன் இளம் வயதில் பள்ளிக்கு வெகு சில நாட்களே போனார். ஒரு நாள் வகுப்பை விட்டு வரும் பொழுது அவரின் பாக்கெட்டில் ஒரு துண்டு சீட்டு இணைக்கப்பட்டு இருந்தது. அதை அவரின் அன்னை எடுத்து பார்த்தார். கண்களில் நீர் முட்டிக்கொண்டது. "டாமி படிக்க லாயக்கில்லை ! வீட்டிலேயே வைத்துக்கொள்ளவும் !" என்று அந்த கடிதம் சொன்னது.

வீட்டில் அன்னையே எடிசனுக்கு ஆசிரியை ஆனார். டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டு பள்ளியில் படிக்க லாயக்கில்லை என துரத்தப்பட்ட எடிசன் அன்னையின் அரவணைப்பில் கல்வி கற்றார்.

உள்நாட்டு போர் நடந்த பொழுது சுடசுட செய்திகளை தொடர்வண்டியிலேயே அச்சிட்டு விற்றார் .ரயிலில் ஆய்வு செய்து கொண்டிருந்த பொழுது ஒரு பெட்டியில் தீ பற்றிக்கொண்டதற்காக ரயில்வே மாஸ்டரிடம் அறை வாங்கி ஒரு
பக்கம் கேட்கும் திறனை இழந்த எடிசன் தன் ஓயாத உழைப்பால் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கினார்.


ஊமைப்படங்களை பேச வைக்கும் போனோக்ராஃபை ஆய்வகம் தீப்பிடித்து எரிந்த ஒரு வாரத்தில் உருவாக்கி காட்டினார். குண்டு பல்பின் இழைக்காக மலேசியா வரை ஆளை அனுப்பி பொருட்களை தேடிப்பார்த்தார். பத்தாயிரம் முறை தேடியும்
பொருள் சிக்கவில்லை ,"நான் பத்தாயிரம் முறை தோல்வியடைந்தேன் என சொல்ல மாட்டேன் ;பத்தாயிரம் பொருட்களில் இருந்து பல்பை ஒளிர வைக்க முடியாது !என கற்றுக்கொண்டேன் என்றார்.எடிசன் இறுதியாக பல்பை டங்ஸ்டனை கொண்டு ஒளிர வைத்தார் .

அதை சாதித்த பொழுது நள்ளிரவு .மனைவியிடம் ஆர்வமாக காண்பித்த பொழுது ,"நடுராத்திரியில் தூக்கத்தை கெடுத்துக்கிட்டு ;கண்ணு கூசுது விளக்கை அணையுங்க !" என்றார் .அவர் எப்படி மற்ற கண்டுபிடிப்பாளர்களில் இருந்து தனித்து நிற்கிறார் என்றால் தான் கண்டுபிடித்ததை வெற்றிகரமாக அவர் சந்தைப்படுத்தினார்.

காய்கறி விற்பனை,செய்தித்தாள் விற்றல் ,பள்ளியை விட்டு மூன்றே மாதத்தில் வெளியேற்றம் என விரக்தியான வாழ்வில் 1,093 காப்புரிமைகளை பெற்று இருந்தார் என்பதற்கு பின் எத்தகு உழைப்பு இருக்கும் என உணர வேண்டும் . வாழ்க்கையில் வலிகள் மிகுந்திருந்த பொழுது ஓயாத உழைப்பை கொட்டிய அவர் வெற்றியை ஓயாத உழைப்பே தீர்மானிக்கிறது என அடித்து சொன்னவர் .

ஒன்றுக்கும் உதவாத எடிசன் எனப்பட்டவர் மறைந்தார்;அமெரிக்காவில் விளக்குகள் சிலநிமிடம் அணைந்தன .ரேடியோ கரகரத்தது,"எடிசன் வருவதற்கு முன் உலகம் இப்படித்தான் இருந்தது !" மீண்டும் விளக்குகள் ஒளிர்ந்து ஊரே மின்னியது ரேடியோ சன்னமாக சொன்னது ,"எடிசன் பிறந்ததற்கு பின் உலகம் இப்படித்தான் இருந்தது !".அவரின் அம்மா எனும் ஆசிரியரால் வார்க்கப்பட்ட அந்த வெளிச்ச நாயகன் போராட்ட இருட்டில் மூழ்கி இருக்கும் எல்லாருக்கும் தன்னம்பிக்கை 



-பூ.கொ.சரவணன்
நன்றி : Vikatan EMagazine
11.02.2014

அறிவியல் புரட்சியாளர் சார்லஸ் டார்வின்


        இயற்கை அறிவியலின் ஆய்வு மேற்கொண்ட சார்லஸ் டார்வின்  1859 நவம்பர் 2 இல் ‘உயிருனங்களின்  தோற்றம்’ (on the ori-gin of species) என்ற நூலை உடனேயே அனைத்து மக்களின் கவனத்தையும் கவர்ந்தது. மேற்குடியினர் வட்டங்களும் இழிசுவை கொண்ட பத்திரிக்கைகளும்  இதைக் காழ்ப் புணர்ச்சியுடன் திட்டித் தீர்த்தன. கிருத்துவத் திருச்சபைகள் சாபமிட்டன. அதே சமயம் அக்காலத்து முற்போக்கு மனிதர்கள் இதை வியந்து பாராட்டினர். காரணம் மனிதகுலம் இயற்கையாகத் தோன்றியதே தவிர கடவுளால் தோற்றுவிக்கப்படவில்லை என்று இவற்றில் கறாரான விஞ்ஞான அடிப்படையில் காட்டப்பட்டிருந்தது. மனிதன் விலங்குலகிலிருந்து தோன்றினான் என்று டார்வின் கண்டுபிடித்ததானது 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிலவிய விஞ்ஞானக் கண்ணோட்டங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.




        மாறுபடும் தன்மை, பரம்பரையாக வரும் பண்புகள், இயற்கைத் தேர்வு ஆகியவைதான் விலங்குலகின் முற்போக்கான பரிணாம வளர்ச்சியின் இயக்குச் சக்திகள் என டார்வின் காட்டினார். வலிமையான அந்தந்த இயற்கை சூழ்நிலைகளுக்கு மிகவும் ஏற்ற வகையினங்கள், உயிருனக் குழுக்கள், தனிபட்ட உயிரினங்கள், இயற்கைப் பரிணாம வளர்ச்சியின் பொருளில் மிகவும் நெளிவு சுழிவானவைகளுந்தான் உயிர் பிழைத்தன. தம் சந்ததிகளை விட்டுச் சென்றன. பரிணாம வளர்ச்சி என்பது லட்சக்கணக்கான ஆண்டுகள் நிகழ்ந்தது. இந்தப்படியான பரிணாம வளர்ச்சி மெதுவாகவும் அதே நேரத்தில் உறுதியானதாகவும் நிகழ்ந்தது. ஒருவகை உயிரினத்தில் காலங்காலமாக ஏற்பட்ட மாறுதல்களினால் அது புதிய உயிரினமாக மாறியது. மனிதக் குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்தான் என்பதை பிற்போக்காளர்களின் பலத்த கூச்சல்களுக்கிடையில் அறிவுலகம் அதை ஏற்றுக் கொண்டது.

சார்லஸ் டார்வினின் பாட்டனார் எராஸ்மஸ் டார்வின் கேம்பிரிட்ஜ்,எடின்பர்க் பல்கலைக்கழகங்களில் பயின்று மருத்துவரானவரே. அவர் இயற்கை அறிவியலில் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் எழுதிய  ‘ஸினோமியா’ (zoonomia) என்ற நூல் பின்னாட்களில் பரிணாம வளர்ச்சி என்ற கோட்பாட்டினை முன் வைத்த நூலாகும். அவர் அக்காலத்தில் அடிமைமுறை எதிர்ப்பில் தீவிரமாக இருந்தார். பிரான்சில் 1789-ல் நடந்த பிரெஞ்சுப் புரட்சியை, உற்சாகமாக வரவேற்றார். இத்தகைய பின்னணியில் பிறந்த சார்லஸ் டார்வின் பள்ளியில் சேர்க்கப்பட்டார். 16ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட அப்பள்ளியின் பாடத்திட்டங்கள் பழங்காலத்தியதாகவே இருந்தது. அது சார்லஸ் டார்வினை ஈர்க்க வில்லை. சிறுவன் டார்வின் இயற்கை சம்மந்தமான விபரங்களை அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தார். 

1825-ம் ஆண்டு சார்லஸ் டார்வினை மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். சார்லஸ் டார்வினுக்கு மருத்துவப் படிப்பில் ஆர்வமில்லை. எனவே வேறு கல்வியில் சேர விரும்பினார். தந்தையின் விருப்பத்திற்கு மாறாக அதே எடின்பர்க்  பல்கலைக் கழகத்தில் இயற்கை விஞ்ஞானப் படிப்பில் சேர்ந்தார். இயற்கை விஞ்ஞானத்தில் தமது பரிசோதனை ஆய்வைத் தொடங்கும் வகையில் ‘நியூ ஹேபன்’ என்ற கிராமத்திலிருந்து கடற்கரையோரப் பகுதிகளில் கடல்பிராணிகளின் வாழ்க்கை முறைகளைப் பற்றி ஆய்வு செய்தார்.

டார்வினின் தந்தை அவரை கிருத்தவப் பாதிரி ஆக்க விரும்பினார். கிருத்தவப் பாதிரி ஆகவேண்டுமென்றால் ஏதாவது பல்கலையில் பயின்று பட்டப்படிப்பில் தேறி இருக்க வேண்டும். எனவே டார்வின் மீண்டும் 19-வது வயதில் 1828-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கே ‘வில்லியம் பேலி’ என்பவர் எழுதிய  ‘இயற்கை சார்ந்த மறையியல்’ (Natural Theology) என்ற நூலைப் படித்தார் அதில் பேலி முன்வைக்கும் கண்ணோட்டம் என்னவென்றால் ஒரு கடிகாரத்தை வடிவமைப்பது போன்றே இந்த உலகத்தை ஒருவர் திட்டம் தீட்டிப் படைத்திருக்க வேண்டும். அவர் படைப்பாளர் என்ற கடவுள் என்பதுதான். டார்வின் தனது ஆய்வு நோக்கு உள்ளிட்ட தம்முடைய தனித்தன்மை காரணமாக பேராசிரியர்களிடம் நல்ல செல்வாக்கு பெற்றிருந்தார். கிருத்தவக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ஆடம்ஜெட்ஸ்விக் நார்த்வேல்ஸ் பிராந்தியத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொள்ளவிருந்தார் நில அமைப்பியல் தலைவர் ஆடம்ஜெஸ்விக்குடம் ஆய்வுப் பயணம் மேற்கொள்ள டார்வினை பேராசிரியர் ஹென்ஸ்லோ பரிந்துரைத்தார். 1830-ம் ஆண்டு ஒருவார கால ஆய்வின்போது டார்வின் மேற்கொண்ட பணிகளும் அவருடைய கண்டுபிடிப்புகளும் அதன் முக்கியத்துவத்தையும் ஜெட்ஸ்விக் மிகவும் பாராட்டினார் பின்னர் தந்தையிடம் கொடுத்தவாக்கின்படி பாதிரியாராகப் பணியாற்ற ஊர் வந்து சேர்ந்தார் ஆனால் ஊர்வந்து சேர்ந்ததும் ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஊருக்கு அவருடைய அன்பு பேராசிரியர் ஹென்ஸ்லோ கடிதம் எழுதியிருந்தார். “தென் அமெரிக்காவை அளவாய்வு (survey) செய்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதற்குக் கேப்டன் பீட்ஸ்ரோய் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் பணிபுரிய இயற்கை மற்றும் உயிரின ஆராய்ச்சியாளர் தேவைப்படுகிறது. நான் உன்னைப் பரிந்துரைத்துள்ளேன். உன் தகுதிபற்றி சந்தேகமோ, அச்சமோ கொள்ள வேண்டாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்” என எழுதியிருந்தார். பேரார்வம் கொண்ட டார்வின் தனது தந்தையை சமாதானப்படுத்தி பல ஆண்டுகள் நடக்கும், பலநாடுகள் செல்லும் அப்பயணத்தை ஒப்புக்கொண்டார். டார்வின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை அடைந்தார். ஹென்ஸ்லோவின் ஆலொசனைப்படி பீட்ஸ்ரோயைச் சந்தித்தார். ஆய்வின் நோக்கத்தை விளக்கினார் பீட்ஸ்ரோய். தென் அமெரிக்காவின் தென் பிராந்திய கடலோரப்பகுதிகளை முழுமையாக அளவாய்வைச் செய்வதும், கடலோரம், அதனை ஒட்டியுள்ள தீவுகள் ஆகியவற்றின் வரைபடம் தயாரிப்பதும் ஆகும். இதற்காக ஹெச்.எம்.எஸ்.பீகிள் என்ற கப்பல் 1831 டிசம்பர் 27 அன்று பிற்பகல் 2 மணிக்கு டோவன்போர்ட் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. டார்வின் கடல் பயணத்தை 22-ம் வயதில் மேற்கொண்டார். அப்போது அவர் மூன்று உலகப் பெருங்கடல்கள் வழியாக அறிவுப் பயணத்தை 4 ஆண்டுகள் 9 மாதங்களில் நடத்தி முடித்தபோது அவரது வயது 27 இந்த இளைஞன் ஒரு முதிர்ந்த ஆய்வாளருக்குரிய சாதனைகளைப் புரிந்திருந்தார். ஆய்வுகளை முடித்து பீகிள் கப்பல் 1836 அக்டோபர் 26 அன்று பிரிட்டனை அடைந்தது. “சார்லஸ் டார்வின் பீகிள் கப்பலில் செய்த பயணம் 40 ஆயிரம் மைல்கள் நிலவழிப் பயணம் 2000 மைல்கள் நில அமைப்பியல் மற்றும் தாவரவியல்  குறித்து அவர் எழுதிய குறிப்புகள் 1700 பக்கங்கள். நாட்குறிப்பு 800 பக்கங்கள் எலும்புகள் உலர்ந்த உயிரின மாதிரிகள் 4000 அதேபொருட்கள் சாராயத்தில் பக்குவப்படுத்தப்பட்டது 1500 பயணத்தின் செலவு 1000 பவுண்டுகள் இது மாபெரும் சாதனையல்லவா?




இதற்கிடையில் டார்வின் தனது 5 ஆண்டுகள் பயணத்தின்போது எழுதிய கடிதங்கள், ஆய்வுக் குறிப்புகளை பேராசிரியர் ஹென்ஸ்லோவுக்கு அனுப்பிவைத்திருந்தார். அவைகளை அவ்வப்பொழுது பத்திரிகைகளில் வெளியிட்டுப் பெரும் புகழ்பெற்றிருந்தார் டார்வின் அறிவியலாரின் கவனம் டார்வின் மேல் பதிந்திருந்தது. தாம் சேகரித்திருந்த 450 உறுப்படிகளை 1837 ஜனவரி அன்று நில அமைப்பியல் அறிவாளர்கள் அமைப்பிடம் ஒப்படைத்தார். அமைப்பின் கவுன்சில் உறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1877 நவம்பரில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் இவருக்கு  டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியது. தனது ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து அவற்றின் அடிப்படையில் நூல்களை எழுதிவெளியிட்டார். தென் அமெரிக்காவில் சேகரித்த பொருள்களின்  அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றைத் தற்போதைய உயிரினங்களோடு ஒப்பிட்டு அவர் செய்த ஆராய்ச்சி அவரைப் பரிணாம வளர்ச்சி என்ற முடிவுக்கு இட்டுச் சென்றன டார்வினிடம் ஏற்பட்ட இந்தக் கருத்துக்கள் பொருள் முதல்வாதத்திலிருந்து விசுவாசமாக இருப்பதைப் பார்த்து அவரே ஆச்சரியப்பட்டார். அன்று அவர் தலைமுறையைச் சேர்ந்த கார்ல் மார்க்ஸ் பிரெடெரிக் ஏங்கல்ஸ் ஆகியோர் கருத்து முதல்வாதத்தை எதிர்த்து கருத்துப் போராட்டம் நடத்தி வந்தனர். எனவே டார்வினின் பொருள்முதல்வாத முடிவு கார்ல் மார்க்ஸின், ஏங்கல்ஸின் பாராட்டுக்குரியதாக இருந்தது. இந்தப் பின்னணியில்தான் இருதரப்பினருக்கும் கடிதத் தொடர்புகள் ஏற்பட்டன. குரங்கிலிருந்து மாற்றமடைந்த தொடர்ச்சிதான் மனிதன் என்ற டார்வினின் விளக்கம் அறிவியல் உலகின் பாதையை வெளிச்சமாக்கியது. 1882 ஏப்ரல் 19 மாலை சார்லஸ் டார்வின் காலமானார். அவருடல் புகழ்பெற்ற பல விஞ்ஞானிகளின் நினைவிடத்தில் அறிவியல் அறிஞர்களால் அடக்கம் செய்யப்பட்டது.
வாழ்க அவர் புகழ் உலகு உள்ளவரை !
(09.02.2014 சார்லஸ் டார்வின் பிறந்த நாள்)

கட்டுரையாளர்: ஆர்.பாலச்சந்திரன்,
 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
 விருதுநகர் துணைத் தலைவர்.
தொடர்புக்கு:9486207060
நன்றி : ஜனசக்தி : 09-02-2014




Thursday, January 30, 2014

சோசலிசமும் மதமும்


மதம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம் என்று பிரகடனப்படுத்த வேண்டும். இந்தச் சொரற்களில் சோஷலிஸ்டுகள், மதத்தின்பால் தங்களுடைய மனப்பான்மை என்ன என்பதைப் பொதுவாக வெளிப்படுத்துகிறார். ஆனால் எத்தகைய தவறான எண்ணமும் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக இந்தச் சொற்களின் அர்த்தத்தை மிகத் துல்லியமாக வரையறுக்க வேண்டும். அரசாங்கத்தைப் பொருத்தவரையில் மதம் தனிப்பட்ட விவகாரமாகக் கொள்ளப்பட வேண்டும் என்று நாம் கோருகிறோம்.

ஆனால் கட்சியைப் பொருத்தவரையில் மதத்தை ஒரு தனிப்பட்ட விவகாரமாக எந்தக் காரணத்தைக் கொண்டும் கருத முடியாது. மதம் அரசாங்கத்தின் சார்புடையதாக தொடர்பு கொண்டதாக இருக்கக்கூடாது, மத சம்பந்தமான ஸ்தாபனங்கள் சர்கார் அதிகாரத்துடன் எவ்வித தொடர்பும் கொண்டிருக்கக்கூடாது. எவருக்கும் எந்த மதத்தைத் தழுவுவதற்கும் பரிபூரண உரிமையுண்டு. எந்த மதத்தையும் தழுவாமல் அதாவது நாத்திகனாக இருக்கவும் உரிமையுண்டு ஒவ்வொரு சோஷலிஸ்டும் பொதுவாக ஒரு நாத்திகனாகத்தான் இருக்கிறார்.

மதத்தழுவலில் காரணமாகக் குடிமக்களிடையில் பாகுபாடு காட்டப்படுவது எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்றக்கொள்ள முடியாததாகும். அதைச் சிறிதும் சகிக்க முடியாது. அதிகார பூர்வமான அரசாங்க தஸ்தாவேஜிகளில் ஒரு குடிமகனின் மதச் சார்பைப் பற்றி வெறும் பெயரளவில் குறிப்பிடப்படுவது கூட கேள்விக்கிடமில்லாத படி நீக்கப்பட வேண்டியதாகும். ஸ்தாபனமாகியுள்ள மாதா கோவில்களுக்கு மானியங்கள் கொடுப்பது கூடாது. மத குருக்களின் நிறுவனங்களுக்கோ அல்லது வேறு எந்த மத சம்பந்தமான ஸ்தாபனங்களுக்கோ அரசாங்க அலவன்ஸ் கொடுப்பதுகூடாது.

இந்த மத சம்பந்தமான நிறுவனங்கள் நூற்றுக்கு நூறு சுயேட்சையாக உருவாக்கப்பட்டு நடத்தப்படுபவையாக இருக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படுவதன் மூலம்தான் பழைய அவமானகரமான, வெட்கக் கேடான, வெறுப்பிற்குரிய கடந்த காலத்திற்கு ஒரு முடிவு கட்ட முடியும் முன்பு அரசாங்கத்தின் நிலப்பிரபுத்துவ அமைப்பைச் சார்ந்து மாதா கோயில்கள், அதன் நிறுவனங்கள் இருந்தன.

ஸ்தாபிதமான மாதா கோயில்கள் மீது நிலப்பிரபுத்துவ ரீதியில் ரஷ்யக் குடிமக்கள் வாழ்ந்து வந்தனர். அப்போது மத்தியகால, எரிச்சலூட்டும் படியான பிறர் விஷயங்களில் தலையிடுகிற அருவருப்பான சட்டங்கள் முரண்பட்ட சமயக் கருத்துகள் கொண்டவர்களைத் தண்டிக்க வழி கோலும் சட்டங்கள், (இன்று வரையில்கூட நமது கிருமினல் சட்டங்களில் இதர சட்டங்களில் உள்ள பல்வேறு ஷரத்துக்கள்) செயல் பாட்டில் இருந்தன. அச்சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டன பிடிக்காத மத நம்பிக்கை கொணடவர்களை, அல்லது மத நம்பிக்கை இல்லாதவர்களைத் தண்டனைக் குள்ளாக்கினார்கள். 

மனிதனின் மனச் சான்றுகள் மீறப்பட்டன நிறுவபட்ட மாதா கோயில்கள் மூலம் சொகுசான சர்க்கார் உத்தியோங்களையும், அரசாங்கத்தின் சார்பில் வருவாய் வருவதற்கான வாய்ப்புகளையும்  ஆண்டவன் விதித்த கட்டளை என்பதன் பேரால் ஏதாவதொரு மதச் சாயலுடன் இணைத்துக் கொண்டார்கள். சர்ச்சும் அரசும் முழுமையாக  வேறுபடுத்தப்பட வேண்டும் இதைத்தான் நவீன அரசாங்கத்திடமிருந்தும், நவீன சர்ச்சுகளிடமிருந்தும் சோசலிஸ்டுப் பாட்டாளி வர்க்கம் கோருகிறது
-லெனின்
(நன்றி: நியூ செஞ்சுரியின் சிறுநூல் வரிசை,
‘சோசலிசமும் மதமும்’ எனும் நூல்.)