Tuesday, October 6, 2015

நிலையாமை

No man ever steps in the same river twice, for it's not the same river and he's not the same man.

Heraclitus

 நிலையாமை என்பது நிதர்சனமானது தவிர்க்க முடியாது. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தமே மாற்றத்திற்கு உட்பட்டது. இதைத் தான் மேலே உள்ள வரிகள் வெளிப்படுத்துகிறது. இதையே மாற்றம் ஒன்றே மாறாதது என்றார் புத்தர். இதையே சமூக விஞ்ஞான கண்ணோட்டத்தில் வெளிபடுத்தினார் மார்க்ஸ். எனவே என்றுமே மாறாத நிலையான பொருள்,  என்ற ஒன்று (அதாவது ஆத்மா) இல்லவே இல்லை, இருக்கவும் முடியாது என்கிறார் புத்தர். மாற்றத்தின் வேகத்தை கூட்டலாம் குறைக்கலாமே தவிர, அதை தவிர்க்க முடியாது. இது தான் அவரது அனாத்மா வாதம். ஆத்மா என்ற ஒன்று இல்லை என்றால், பேராத்மாவாகிய கடவுளும் இல்லை என்கிறார். நிலையாமை என்பதை  நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதை விடுத்து நாம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் எனும் பேராசையில் ஆத்மா, ஒளி உடல் அதற்கான வழிமுறை என செல்வது, போகாது ஊருக்கு வழியே ஆகும். இந்த ஆசையைத் தான், ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர்.
                        - பாண்டூ, சிவகாசி .