Wednesday, September 25, 2013

மறுமலர்ச்சி இலக்கிய நாயகன் - சரத்சந்திரர்



வங்க இலக்கிய உலகில் பெருமாற்றங்களைக் கொணர்ந்த படைப்பாளிகளில் முக்கிய இடம் பெற்றவர் சரத்சந்திரர். மகாகவி இரவீந்திரநாததாகூரும் சரத்சந்திரரும் ஏறக்குறைய ஒரே காலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் முன்னவரின் படைப்புகளை ஊன்றி ஆய்வுசெய்து அதைத் துணையாய்க் கொண்டு தனது படைப்புகளின் தன்மையைச் செழுமைப் படுத்திக் கொண்டார். இவரது படைப்புகள் தனித் தன்மை உடையதாய் விளங்கியது. தனது வாழ்வின் அனுபவங்களையே துணையாய்க் கொண்டு தனது படைப்புகளை உருவாக்கினார். எனவே அவ்விலக்கியங்கள் உண்மைத் தன்மை வாய்ந்தவையாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளம் கவர்ந்தவையாகவும் விளங்கியது.
‘சரத்சந்திர சட்டர்ஜி’ என்றும், ‘சரத்சந்திர சட்டோபாத்தியாயா’ என்றும் அழைக்கப்படும் சரத்சந்திரர் வங்காளத்தின் ஹீக்ளி மாவட்டத்தில் ‘தேவானந்தபுரம்’ என்னும் கிராமத்தில் 1876 செப்டம்பர்15 அன்று பிறந்தார். இவரது தந்தை மோதிலால் சட்டோபாத்தியாயா வங்காளி மற்றும் ஆங்கில மொழியறிவு படைத்தவர். நடுத்தரக் குடும்பம். ஓரிடத்திலிருந்து நிலையாகப் பணியாற்றாமல் கதை, காவியம், நாடகம் இயற்றியும் அதையும் முழுமைப் படுத்தாமலும் வாழ்ந்தார். அவரது எட்டு குழந்தைகளுள் இரண்டாவதாகப் பிறந்த சரத் சந்திரர் அவருடைய இலக்கிய நாட்டங்களைப் பாரம்பரியமாகப் பெற்றார்.
தொடக்கத்திலிருந்தே முறையான பள்ளி வாழ்க்கை அவருக்கு பிடிக்காததால் அடிக்கடி வீட்டைவிட்டு வெளியேறுவதும் திரும்புவதுமாக இருந்தார். வீட்டில் தந்தையார் எழுதிவைத்த நாவல்கள் மற்றும் கதைகளை ரகசியமாகப் படிப்பார். அவர் எழுதி முடிவு பெறாத நாவல்களே கதைகளே அதிகம். அதை தான் எழுதிமுடிக்க வேண்டும் என எண்ணமிடுவார். இதுவே இவர் முயற்சிக்கு மூளையாயிருந்தது. இவரது தந்தை பின்னர் பாகல்பூரில் குடியேரினார் அங்கு இருந்த நூலகத்திலிருந்து பக்கிம் சந்திரர் நாவல்கள், நவீன் சந்தரின் காவியங்கள், ஈசுவர சந்திரரின் நூல்கள் ஆகியவற்றை விரும்பிபடித்தார்
சிறு வயதிலேயே இவருக்கு இலக்கியச்சுவை தோன்றிவிட்டது. அப்பொழுது பாகல்பூரில் புகழ்பெற்ற பாடகரும் எழுத்தாளருமான சுரேந்திரநாத் மஜீம்தார் வீட்டிற்கு அடிக்கடி சென்று வரலானார்.
1894-ல் பாகல்பூரில்  தேஜ் நாராயண ஜீபிலி கல்லூரியில் எம்.ஏ. படிக்கத் தொடங்கினார். அப்பருவத்தில் ஆங்கில இலக்கியங்களை விரும்பிப்படிக்க ஆரம்பித்தார் தாக்ரே.டிக்கன்ஸ் திருமதி ஹென்றிவுட் ஆகியோரின் நாவல்கள் அவரைப் பெரிதும் கவர்ந்தன திருமதி ஹென்றிவுட் எழுதிய பிரபல நாவலொன்றைத் தழுவி ‘அபிமானம்’ எனும் பெயரில் வங்க மொழியில் நாவலொன்றை எழுதினார். ஆனால் அது அச்சேற எவ்வித முயற்சியும் செய்யவில்லை.
இலக்கிய தாகம் அவருக்குள் நாளுக்கு நாள் வளர்ந்தது தாய் மொழியில் அவருக்கு பற்று அதிகம். அக்காலத்தில் படித்தவர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் கடிதப் பரிமாற்றம் செய்து கொள்வதைத்தான் கௌரவமாக எண்ணினர் சரத்சந்திரர் அந்த வழக்கத்தையும் மனப்போக்கையும் எதிர்த்துச் சாடினார், நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ ஆங்கிலத்தில் கடிதம் எழுதியதே இல்லை. தம்முடைய கொள்கையை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கவும் தயங்கியதே இல்லை. இவருடைய மொழிப்பற்றும் இலக்கிய தாகமும் அத்துடன் நின்றுவிட வில்லை.


‘சிசு’ என்ற கையெழுத்துப் பத்திரிக்கை ஒன்றை நடத்தினார். பாகல்பூர் இலக்கிய கழகம் (பாகல் பூர் சாகித்ய சபா) சரத்சந்திரரால் உருவாக்கப்பட்டது அதில் சுரேந்திரநாத் கங்கோபாத்தியா, நிரூபமாதேவி, யோகேசசந்திர மஜீம்தார் ஆகியோர் அந்த குழுவில் இருந்தனர் இவர்கள் பின்னாட்களில் வங்க இலக்கியத்தில் பெரும் புகழ் பெற்றவர்களாவர். கவிதைகள், கதைகள் எழுதுவதே இக்குழுவினரின் முக்கியச் செயல்பாடு. தாகூர் படைத்த இலக்கியங்களைத் திறனாய்வு செய்வது இக்குழுவின் அன்றாடச் செயல்பாடு. 
கல்கத்தாவில் இருகுழுக்கள் இலக்கிய கழகங்கள் ஆரம்பித்து இலக்கிய விமர்சனங்களில் ஈடுபட்டன. ஒரு குழு நடத்திய ‘சாயா’ என்ற கையெழுத்து இதழில் சரத்சந்திரர் தமது எழுத்து வேகத்தைத் தீவிரப்படுத்தினார். ‘சாயா’வில் அவர் பெற்ற இந்த இலக்கியப் பற்றினால்தான் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் ‘யமுனா’,     ‘சாகித்தியம்’ என்ற இரு மாதப் பத்திரிக்கைகளில் அவர் பரிமளிக்க முடிந்தது. அவரது வளமான நடை வங்க மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது
வங்காளிகள் சமூகத்தில் சம்பிரதாயப் பழக்கங்களை விடாப்பிடியாக அனுசரித்து வந்த ஆசாரவாதிகளின் பிடி பலமாக இருந்தது அதை எதிர்த்தவர்கள் சமூகத்திலிருந்தே ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
அச்சமயம் சிவசந்திர வந்தோ பாத்தியாயா என்ற விசால மனப்பான்மை கொண்ட வங்காளி ஒருவர் ஐரோப்பா சென்று பாரீஸ்டராகக் கல்வி பயின்று திரும்பி வந்தார். அவரைக் குலவழக்கங்களை மீறியவராக உறவினர்கள் ஜாதி பிரஷ்டம் செய்தனர் அதற்கு அவர் அடி பணியவில்லை இந்து சமூகத்தில் புரையோடியுள்ள போலி ஆசாரங்களைக் கண்டித்தார் ஆசாரவாதிகளுக்கெதிராக தனது விரிந்த மனப்பான்மை மற்றும் இனிய பண்பாடுகளால் பலரைத் தன் வசம் ஈர்த்தார் அவர் வீட்டில் உடற்பயிற்சி சாலை இருந்தது நாடகக்குழு ஒன்றும் விரைவில் உருவாயிற்று ஆர்மோனியம் கபேலா இவற்றின் பின்னணியோடு இசை முழக்கம் சிவசந்திரர் வீட்டில் நிலவியது
சரத்சந்திரரிடம் உள்ளடக்கிய கலைச்சுவை, குலக்கட்டுப்பாட்டை மீறி சிவசந்திரருடன் நட்பை உருவாக்கியது சரத்சந்திரரும் அவர் நெருங்கிய நண்பர் ராஜீவும் சிவசந்திரர் நடத்திவந்த நாடகக்குழுவில் பங்கேற்றனர் பக்கிம் சந்திரர் எழுதிய ‘மிருனாளினி’ நாடகத்தை அக்குழு அரங்கேற்றியது சரத்சந்திரர் அதில் முக்கியப் பாத்திரம் ஏற்று தமது நடிப்புத்  திறமையால் மக்களை ஈர்த்தார் சிவச்சந்திரர் புகழ் பரவப்பரவ ஆசாரவாதிகள் மிகவும் ஆத்திரமடைந்தனர் அவருடன் சேர்ந்ததால்  சரத்சந்திரரும் தனது சொந்த சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டார்.
தந்தை இறந்தார். பொருளாதாரத்தில் பலகீனமுற்ற அவர் ரங்கூனில் இருந்த சித்தப்பர ஒருவரின் அழைப்பின். பேரில் ரங்கூன் சென்றார். பர்மாவில் சிறந்த வழக்கறிஞறராக விளங்கினார் அவர் சித்தப்பா அகோரபாபு. அங்கும் துன்பம் தொடர்ந்தது.  அகோரபாபு இறந்து போனார். மிக நொந்த நிலையில் அவருக்கு பர்மிய சரசில் பொதுப்பணித்துறையில் பணி கிடைத்தது. அங்கு ‘வங்கசந்திரர்’ என்ற கல்விமானுடன் நட்புறவு ஏற்பட்டது. பர்மாவில் வசித்த வங்காளிகள் ‘வங்க சமூகக் கழகம்’ ஒன்றை நடத்தினர். அதில் சரத்சந்திரர் எழுதிய கட்டுரை ஒன்று பிரசித்தி பெற்றது. அங்கு வசித்த நாட்களில் அவருடைய எண்ணங்கள் மிகவும் பக்குவப்பட்டது.
நாடு கடந்துவந்த இந்தியர்கள் பல்வேறு ஜாதி, மதம், இனம் சார்ந்தவர்களாக இருந்தனர். அவர்களுடைய வாழ்க்கை இவருடைய மறுமலர்ச்சி சிந்தனையை மேலும் வலுப்படுத்தியது. பின் உடல்நிலை சீர்கெட்டதன் காரணமாக வைத்தியம் செய்துகொள்ள இந்தியா திரும்பினார். சரத்சந்திரர் 1903 முதல் 1917 வரை பதினான்கு ஆண்டுகாலம் பர்மாவில் தங்கினார். இதுவே இவர் வளர்ச்சிக்கு பொற்காலமாகியது.
பர்மாவிலிருந்து வங்காளம் திரும்பியதும் சரத்சந்திரருக்கு இலக்கிய ஆவேசம் பிறந்தது. நாவல்களும் கதைகளும் எழுதிக் குவித்தார். அவருடைய படைப்புகளின் பின்னணி ஏழை எளிய கிராம மக்களாகவே பெரும்பான்மை இருந்தது. சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் இருந்தனர். சாதி மதக் கொடூரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தனர். அவருடைய இலக்கியங்கள் மக்கள் மனதில் ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்தியது. எத்தனையோ உன்னதக் கலைப் படைப்புகள் சரத்சந்திரருக்குப் பேரும் புகழையும் தேடித்தந்தது. அவரது புகழ் நாடு, மொழி என்ற எல்லைகளைத் தாண்டிப் புகழ்பெற்றது.
அவர் 39 நாவல்கள் மற்றும் ஏராளமான கதைகளை எழுதினார். மாதச் சஞ்சிகை நடத்தினார். அவருடைய நாவல்கள் படமாக எடுக்கப்பட்டு பெரும் புகழ் அடைந்தது. சுமார் 50 படங்கள் வரை பல மொழிகளில் எடுக்கப்பட்டு கோடிக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்றது. அவர் எழுதிய ‘தேவதாஸ்’ என்ற நாவல் தமிழ், தெழுங்கு, ஹிந்தி, பெங்காளி உட்பட எட்டு மொழிகளில் படமாக்கப்பட்டது. இன்றைய படங்களிலும் ‘தேவதாஸ்’ தாக்கம் தொடர்கிறது.
இவருடைய நாவல்கள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதிக நாவல்கள் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல பல்கலைக் கழகங்களில் இவருடய நூல்கள் பாடப் புத்தகங்களாக உள்ளன. டாக்கா பல்கலை இவருக்கு விருது கொடுத்து கௌரவம் செய்தது.
இவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். தேசபந்து சித்தரஞ்சன் தாஸின் வேண்டுகோளை ஏற்று ஹௌரா மாவட்ட காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுச் செயல்பட்டார்.
கடைசிக் காலத்தில் கல்கத்தாவை அடுத்து  ஹௌரா மாவட்டத்தில் குடியேறினார். பின்னர் ஹீக்ளி மாவட்டத்தில் ‘சமேதாபேர் என்ற கிராமத்தில் வசித்தார். உடல்நிலை சரியின்றி சிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சைப் பலனின்றி 1938 ஜனவரி 16 அன்று மறைந்தார்.மனிதனை மனிதனாகக் கண்டவர். அவரை நாத்திகரென்று அயலிருந்தோர் கூறுவர். அதை அவரும் மறுத்ததில்லை. அவருள் நாட்டுப்பற்று மிகுந்திருந்தது. இலக்கியத்தில் ‘தாகூரை’யும் அரசியலில் காந்தியையும் பெரிதும் போற்றினார். மாறுபட்ட கருத்துக்கள் வந்தபோது அவர் மறுத்துப் பேசத் தயங்கவில்லை. மக்களுக்காக எழுதிய மகத்தான மறுமலர்ச்சி இலக்கிய நாயகன் சரத்சந்திரர் !
                       
கட்டுரையாளர்  :  திரு. பாலசந்திரன்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருதுநகர் மாவட்டத் துணைத் தலைவர்
செல்பேசி : 9486207060
நன்றி : ஜனசக்தி நாளிதழ் – 14 செப்டம்பர் 2013

Tuesday, September 17, 2013

அணு உலையின் இயக்கமும் அணு மின்சாரம் பெறப்படும் பொறி முறையும்

http://www.youtube.com/embed/91JZCbGLCvk?feature=player_detailpage

E-mailPrintPDF
உலகெங்கும் மின்சாரம் பெறுவதற்கு ஏறக்குறைய நமது மிதி வண்டி(dynamo) டைனமோவில் பயன்படுத்தப்படும் மின் காந்தப் புலம் தொழில் நுட்பமே அடிப்படையாக உள்ளது. இங்கே பெரிய டைனமோக்களை சுற்றுவதன் மூலம் மின்சாரம் உற்பதியாகின்றது. 
உயர்ந்த நீர்த் தேக்கங்களில் இருந்து நீர் கீழே பாயும் விசையை பயன்படுத்தி டைனமோவைச் சுழலச் செய்து உற்பத்தி செய்வது "நீர் மின்சாரம்" எனவும், காற்றின் மூலம் பெரிய காற்றாட்டிகளை சுற்றச் செய்து டைனமோவைச் சுழலச் செய்து உற்பத்தி செய்வது"காற்றாலை மின்சாரம்" எனவும், நீரைக் கொதிக்க வைத்து, நீராவியின் சக்தியால் டைனமோவைச் சுழலச் செய்து உற்பத்தி செய்வது"அனல் மின்சாரம்" எனவும் அழைக்கப்பெறுகின்றன.
அனல் மின்சாரம் உற்பத்தியாக்குவதற்கு நீரைக் கொதிக்க வைத்து ஆவியாக்குவதற்கு நிலக்கரி, டீசல், பெட்ரோல், எரிவாயு போன்றவற்றை எரிபொருளாக பயன்படுதுகின்றார்கள். நீராவியில் விசையால் புகையிரதங்கள், பெரிய கப்பல்கள் இயங்குவதுபோல் பெரிய டைனமோக்களை சுழலச் செய்து மின்சாரம் பெறப்படுகின்றன.இவ்வாறு நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்குவதற்கு நிலக்கரி, டீசல் போன்றவைகள் அதிகமாக தேவைப் படுவதனால் அதற்குப் பதிலாக அணுவின் உட்கருவைப் பிளப்பதால் உருவாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தியாக்குவதே "அணு மின்சாரம்".

ஒரு டன் அணுக்கரு யுரேனியம் உண்டாக்கும் வெப்பசக்தி, (2-3) மில்லியன் டன் இயல்வள எரிபொருள்கள் [நிலக்கரி, எரிவாயு அல்லது எரி ஆயில்] தரும் வெப்பசக்திக்குச் சமம். அதாவது சுண்டக்காய் அளவு யுரேனியம் [7 gram Uranium Pellet] 3.5 பீப்பாய் எரி ஆயில் [Barrels of Oil], 17,000 கியூபிக் அடி எரிவாயு [Natural Gas] அல்லது 1780 பவுண்டு நிலக்கரி தரும் வெப்பத்தை உண்டாக்குகிறது.
யுரேனியம் போன்ற சில தனிமங்கள் பிரிக்கப்படும்போது அதிக அளவு வெப்பமும் ஆற்றலும் வெளிவிடப்பெறுகின்றன. அவற்றை முறைப்படுத்தி அதைத் தொடர் நிகழ்வாக மாற்றி நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழல வைத்துப் பெறப்படுவது தான் அணு மின்சாரம். 
சூரிய ஒளி (Solar) மின்சாரமும் இதே போன்றது தானா? 
இல்லை. சூரிய ஒளியின் சக்தி மூலம் வெப்ப நிலை தூண்டப்படும் சோலார் கதிர் ஈர்ப்பு தட்டுகளை (Panels) பயன் படுத்தி பெறப்படுவதே சூரிய ஒளி மின்சாரம் எனப்படும். இவை மூலம் பெறப்படும் மின்சாரம் மின்கலன்களை (Batteries) மின்னூட்டம் (Charge) செய்ய முடியும் அல்லது சேமிக்க முடியும். அந்த மின்கலன்கள் மூலம் மின்சாரம் பெறப்படுகிறது. 
அணு உலையின் தொழில் நுட்பம் என்ன? அதனால் ஏற்படும் நன்மை தீமைகள் யாவை?
அணு உலைகளில் 
2%-3% செறிவு யுரேனியம் என்ற தனிமம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. யுரேனியம் அணு, அணுஉலையில் பிரிக்கப்படும்போது சுமார் 2000 oC வரை வெப்பம் உண்டாகின்றது. இவ் வெப்பமானது நீரின் கொதி நிலையான 100 oC ஐ விட பன் மடங்கு அதிகமாகும். இந்த அனணுவை பிரிக்கும் போது உண்டாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி நீரை கொதிக்கச் செய்து நீராவியாக்கப் பெறப்படுகின்றது. அந்த நீராவி மூலம் டைனமோக்கள் சுழற்றப்பட்டு மின்சாரம் உற்பத்திசெய்யப்பெறுகின்றது. இம் முறையானது பெரிய அளவில் மின் சாரத்தை உற்பதியாக்குவதற்கு மிகவும் லாபகரமானது. ஆனால்;
அணுவை பிரிக்கும்போது அதிக வெப்பம் வெளிப்படுவதனால் அணுவைப் பிரிக்க பயபடுத்தும் அணு உலையைக் குளிர்விக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. அதற்காக கடலிலிருந்து அல்லது வற்றாத நீர் நிலைகளில் இருந்து நீர் பெறப்படுகின்றது. கடல் நீரில் உப்பு இருப்பதனால் சுத்திகரிக்கப் பெற்று உப்பு அகற்றி, நன்னீராக மாற்றிய பின் அணு உலையை குளிராக்க பன்படுத்தப்படுத்துகின்றார்கள். 
யுரேனியம் அணுவைப் அணு உலையில் பிரிக்கும்போது வெப்பத்தை வெளியேறி பிரிவுறும் போது அது, புளுட்டோனியமாக மாறுகிறது. மேலும் அங்கு கடுமையான கதிரியக்கமும் (Radiation) ஏற்படுகிறது. இந்த கதிரியக்கம் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு பெரும் தீங்க்கினை உண்டாக்கக் கூடியன. மிகமிக அபாயகரமானது. இந்தக் கதிர்வீச்சினால் தைராய்டு பாதிப்பு, காசநோய், நீரிழிவு நோய், மலட்டுத் தன்மை, மூளை வளாச்சிக் குறைவு, புண்கள் என பல்வேறு நோய்கள் மனிதருக்கு ஏற்படுவதுடன் மற்றைய உயிரினங்களையும் அழிக்கும் திறன் கொண்டது. இவற்றில் இருந்து உயிரினங்களை பாதுகாப்பதற்காக தகுந்த பாதுகாப்பு தேவைப்படுகின்றன. அதனால் அணு உலையைச் சுற்றி கொன்கிரீட் சுவர்களும், கதிர் வீச்சை தடுக்ககூடிய  பாதுகாப்பு வேலியும்,  கருவிகளும் அமைக்கப்பெறுகின்றன.
இரண்டாவது - இந்த பிரிக்கப்பெற்ற யுரேனியத்தின் கழிவான புளுட்டோனியம் என்பது அணுகுண்டு தயாரிப்பதற்கு பயன்படும் மூலப்பொருளாகும். அணுகுண்டு ஏற்படுத்திய நாசங்களை நாம் ஏற்கனவே ஜப்பான் நாட்டின் கிரோசிமா, நாகசாகி நகரங்களில் பார்த்துவிட்டோம். இந்த அணுக்கழிவுகளை என்ன செய்வது, எப்படிப் பாதுகாப்பது என்பதை உலக விஞ்ஞானிகள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. இந்தக் கழிவுகளின் கதிரியக்கம் கிட்டத்தட்ட 45ஆயிரம் ஆண்டுகளுக்கு வீரியத்துடன் இருக்கும் என அராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மூன்றாவது - இங்க்கு ஏற்படும் விபத்துக்களை மற்றய தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளாக இதைக் கருத முடியாது. அணு உலையில் ஏற்படும் சிறிய விபத்தே மிகப் பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தும். உயிரிழப்பு லட்சக் கணக்கில் இருப்பதுடன் அதன் பாதிப்பு பல தலைமுறைகளுக்கும் தொடரக் கூடியன. நாம் கற்பனை செய்வதை விட இழப்புக்கள் மிகமிக அதிகமானதாகவே இருக்கும். 
நான்காவது - அணு உலை அமையும் இடம் மிக பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதனால் அதைச் சுற்றி வாழும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, தங்கள் வாழ்வாதாரங்களை இழக்க நேரிடும். கடலிலிருந்து ஒரு நாளைக்கு 32 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்பட்டு, அணு உலையை குளிர்வித்தவுடன் அந்த வெந்நீர் கடலில் மீண்டும் சேர்க்கப்படுகின்றன. இதனால் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்பட்டு, உயிர்ப் பெருக்கம் பாதிப்படைவதுடன், அதை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிறது. 
ஐந்தாவது - ஏறக்குறைய ஒவ்வொரு அணு உலையும் ஒரு அணு குண்டுக்குச் சமமானது என கூறப்படுகின்றது. மடியில் அணு குண்டைக் கட்டிக்கொண்டு எப்படி நிம்மதியாக வாழ முடியும். அணு உலையில் தவறுதலாக வெடிப்பு ஏற்பட்டால் அல்லது எதிரிகளால் தாக்கப்பட்டால் அது மிகப் பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கும். 
சிலர் அணு உலைகள் பேராபத்து என்கிறார்கள். ஆனால் விஞ்ஞானிகளோ பாதுகாப்பானது என்கிறார்களே இவற்றில் எது உண்மை? 
அணு உலை பாதுகாப்பாக இருக்குமானால் ஒரு வேளை விபத்தை வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால் அதிலிருந்து தினசரி வரும் கதிரியக்கத்தால் கண்டிப்பாக பாதிப்பு வரும் என விபரமறிந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால் தான் அணு உலைகள் மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளில் அமைக்கப்படுகின்றன.
பாதுகாப்பான அணு உலை எப்படி அமைய வேண்டும்? 
முதலில் அணு உலை அமைந்துள்ள இடம் புவியியல் ரீதியாக பாதுகாப்பானதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
 பொதுவாக அணு உலை அமைந்திருக்கும் தரை கெட்டியான பாறைகளால் உருவானதாக இருக்க வேண்டும். 
அதாவது பூமியின் மேலோடு கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் தடிமனாக உள்ள இடங்களில்தான் அணு உலை அமைக்கப்பட வேண்டும். அடுத்து இந்த அணு உலைத் தொழில்நுட்பம் வெற்றிகரமானதா என்பதை முன் அனுபவங்கள் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். மூன்றாவதாக இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு வேளை விபத்து ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் உறுதி செய்யப்பட வேண்டும். 
பூமியின் அடியிலுள்ள மிகச் சூடான மாக்மா என்ற பாறைக் குழம்பு பூமியின் மேலோடு மெலிதாக உள்ள இடங்களில் வெடிப்பை ஏற்படுத்தி எரிமலையாக வெளிக்கிளம்பும். அது மேற்பரப்பையும், அதன் மீதுள்ள கட்டுமானங்களையும் குறிப்பாக அணு உலையையும் நிச்சயம் பாதிக்க வாய்ப்புள்ளது. 
விமான விபத்துக்களையோ, இரயில் விபத்துக்களையோ, அணு உலை விபத்துடன் ஒப்பிடக் கூடாது. விமானம், இரயில் விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகள் வெறும் நூற்றுக்கணக்கில்தான் இருக்கும். விபத்தின் பாதிப்புகள் தொடராது. ஆனால் அணு உலை விபத்தில் உயிரிழப்பு லட்சக்கணக்கில் ஏற்படும். பல லட்சம் பேர் கதிரியக்கத்தால் நோய்வாய்ப்பட நேரிடும். மேலும் அந்தக் கதிரியக்கப் பாதிப்புகள் பல தலைமுறைகளுக்குத் தொடரும். கண்ணிழந்து, உறுப்புகளை இழந்து குழந்தைகள் பிறக்க நேரிடும். 
மொத்தத்தில் அணு விபத்து என்பது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும்.விபத்திற்குப்பின் 77கி.மீ. வரை 20 ஆண்டுகளுக்கும், 115கி.மீ. வரை 5 ஆண்டுகளுக்கும், 140கி.மீ. வரை ஓராண்டு காலத்திற்கும் அங்கு வசித்த மக்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிப் போக முடியாது.
1986ம் ஆண்டில் செர்நோபில் என்ற இடத்தில் ஒரு அணு உலை விபத்து ஏற்பட்டது. இவ்வளவுக்கும் அப்போது அந்த அணுஉலை இயங்கிக் கொண்டிருக்கவில்லை. மூடப்பட்டிருந்தது. ஆனால் அந்த விபத்தின் காரணமாக 2004 வரை கிட்டத்தட்ட 9,85,000 போ புற்றுநோய் கண்டு உயிரிழந்ததாக இரசிய அரசே உறுதி செய்துள்ளது. மேலும் செர்நோபில் உலையிலிருந்து 2700 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இங்கிலாந்தில் அந்த அணுக்கதிர்வீச்சு உணரப்பட்டு 2,26,500 கால்நடைகளை உடனடியாகக் கொன்று புதைக்க இங்கிலாந்து அரசு உத்தரவிட்டது. 
மீன்கள், மிருகங்கள், மரங்கள் தண்ணீர் என ஒரு நொடிப்பொழுதில் அனைத்தும் நஞ்சாக மாறிப் போயின. சொனோபிலில் நடந்ததை ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடந்த பேரழிவாகக் கொள்ள முடியாது. இது மொத்த உலகத்தையே பாதித்த ஒரு விசயம் என்பதை றசிய அதிபர் கோர்ப்பசேவ் நேர்மையாக ஒத்துக்கொண்டார். 
இதற்கு முன் 1979ல் அமெரிக்காவில் மூன்றுமைல் தீவு என்னுமிடத்தில் அணுஉலை ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்திலும் கணிசமான எண்ணிக்கையில் மக்கள் உயிரிழந்ததோடு அந்தப்பகுதி மீண்டும் பயன்படுத்தமுடியாத அளவிற்கு நஞ்சாக மாறியது. 
சமீபத்தில் ஜப்பானில் புகுசிமாவில் நடந்த அணுஉலை விபத்தில் ஏற்பட்ட சேதங்களை தொலைக்காட்சியில் நாம் நேரடியாகவே பார்த்தோம். இவ்வளவுக்கும் அது அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தின் நேரடி மேற்பார்வையில் இருந்தது. இந்த புகுசிமா அணுஉலையை மூடுவதற்கு கிட்டத்தட்ட 75ஆயிரம் கோடி செலவாகும் என்றும் 45 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 
மூன்றுமைல் தீவு அணு உலை விபத்துக்குப் பின்னர் அமெரிக்காவும், 1986ல் செர்நோபில் விபத்துக்குப்பின் இரசியாவும் இது நாள் வரை தன் நாட்டில் ஒரு அணுஉலை கூட புதிதாகத் திறக்கவில்லை. எல்லா நாடுகளுக்கும் யுரேனியம் விற்பதில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவில் ஒரு அணுஉலை கூட கட்டப்படவில்லை. ஜப்பானில் புகுசிமா விபத்திற்குப் பின் 28 அணுஉலைகள் உடனடியாக மூடப்பட்டு விட்டன. கட்டப்பட்டுக்கொண்டிருந்த 10 அணு உலைகளின் வேலைகள் நிறுத்தப்பட்டு விட்டன. 
ஜேர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட உள்ளதாக அறித்துள்ளது. ஆஸ்திரியா, அயர்லாந்து, கிரேக்கம் போன்ற நாடுகள் அணு உலையின் ஆபத்தை உணர்ந்து அதை மூடும் முடிவில் உள்ளன. 
இந்தியாவில் கல்பாக்கம் அணுஉலை ஒன்றும் பிரமாதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கவில்லை. அதன் திறன் வெறும் 170 மெகாவாட்தான். 1987 மே 4ம் தேதி அதன் உலைத்தண்டு சிதைந்து 2 ஆண்டுகாலம் மூடப்பட்டுக்கிடந்தது. 300 மில்லியன் டாலர் செலவு செய்து அது சீரமைக்கப்பட்டது. 2002ம் ஆண்டு அக்டோபர் 22ல் சோடியம் கதிர்வீச்சு ஏற்பட்டு அதைச் சரிசெய்ய 30 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது.
1999 மார்ச் 26ல் 40 டன் எடையுள்ள கன நீர் கொட்டி அதைச் சுத்தம் செய்த தொழிலாளி உயிரிழந்தார். 2000 சனவரி 24 அன்று பெரும் கதிரியக்கக் கசிவு ஏற்பட்டு அதை இந்திய விஞ்ஞானிகளால் சரிசெய்ய இயலாமல் வெளிநாட்டிலிருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். கல்பாக்கம் அணு உலைக்கும் ஆபத்துக்கள் எந்த நேரமும் வரலாம். அதன் தென்கிழக்கே 104கி.மீல் 03051 என்ற எண் கொண்ட எரிமலை ஒன்று கடலுக்கடியில் குமுறிக்கொண்டிருக்கிறது. அது வெடிக்கும்போது பெரும் சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 
இவை ஒருபுறம் இருக்க கல்பாக்கம் உலையின் கழிவு நீர் கடலில் கொட்டப்படுவதால் கடல் வெப்பம் 80டிகிரி வரை அதிகரித்து மீன் வளம் குறைந்தது. மீனவர்கள் இடம் பெயர்ந்தனர். அங்கு வசிக்கும் மக்கள் நோயால் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அப்பகுதி மருத்துவர்கள் ஆதாரங்களுடன் விளக்குகிறார்கள். அதே போல் தாராப்பூர் அணு உலை கட்டப்படும் போது அங்கு இருந்த மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை 700. இப்போதோ வெறும் 20 மட்டுமே. அப்பகுதியில் பிடிபடும் மீன்களில் கதிரியக்கம் இருப்பதை மும்பை உயர்நீதிமன்றமே உறுதி செய்துள்ளது. 1989 செப்டம்பர் 10-ல் அங்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 700 மடங்கு கதிர்வீச்சு ஏற்பட்டது. அதை சரிசெய்ய ஆன செலவு 78 மில்லியன் டாலர் . 
1995 பிப்ரவரி 3ம் தேதி ராஜஸ்தான் கோட்டா அணு உலையில் ஹீலியம் கன நீர் கசிவு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் உலை மூடப்பட்டது. சரி செய்ய ஆன செலவு 280 மில்லியன் டாலர் . எனவே அணு உலைகளால் பாதிப்புகள் இல்லை என்பது அப்பட்டமான பொய். 
அணுமின்சாரம்தான் மலிவானது. சுத்தமானது என்று சொல்கிறார்களே? 
மின்சாரம் தயாரிப்பில் அதற்கான மொத்த செலவுகளையும் கணக்கிட்டால் லாபகரமானது என்று கூற முடியாது. அணுஉலை கட்டுவதற்கான செலவு, அதை இயக்குவதற்கான செலவு, பிறகு அதை மூடுவதற்கான செலவு என எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். அத்துடன் இவற்றின் ஆயுள் வெறும் 30 ஆண்டுகள் மட்டுமே. பின் இந்த உலைகளை மூடுவதற்கு பல ஆயிரம் கோடி செலவாகும். 
அணு மின்சாரம் சுத்தமானது என்று சொல்வது கேலிக்குரியது. கடல்நீரை ஒரு நாளைக்கு 32லட்சம் லிட்டர் வரை உறிஞ்சி அதை உப்பு அகற்றி உலையைக் குளிர்விக்கப் பயன்படுத்துகிறார்கள். அந்த உப்புக் கழிவுகளை மீண்டும் கடலில்தான் கொட்டுவார்கள். குளிர்வித்த நீர் வெந்நீராக திருப்பி கடலில்தான் கொட்டப்படுகிறது. கடலில் கொட்டப்படும் வெந்நீரால் அப்பகுதி மீன்வளம் பாதிக்கப்படும். சுமார் 4 டிகிரி வெப்பம் உயாந்தாலே நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து மீன்கள் இறக்க நேரிடும். அணு உலையின் கதிரியக்கச் செயல்பாடுகளால் சுற்றுப்புறமும் சீர்கெடும். மக்கள் நோய்க்கு உள்ளாவார்கள். இவை எல்லாவற்றையும் விட மிக ஆபத்தானது அணுக்கழிவுகள்.  
அணுக்கழிவுகளை ஆபத்தில்லாததாக மாற்றுவதற்கு எந்த தொழில்நுட்பமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே உண்மை. அவற்றை பாதுகாப்பான பெட்டிகளில் இட்டு பூமிக்குள் புதைப்பதுதான் இதுவரை நடைமுறையாக உள்ளது.

Monday, September 16, 2013

மருத்துவ விஞ்ஞானத்தின் பாதை . . . . ?


---------------------------------------------------------------------------

மனித குல வளர்ச்சியில் ஈடு இணையற்ற பங்கு வகிப்பது மருத்துவ அறிவியலாகும். சிசு உருவாவது முதல் மனிதனின் கடைசி மூச்சு வரை எழும் ஆயிரக்கணக்கான ஆரோக்கியம் பற்றிய கேள்விகளுக்கு விடைகாண முயன்ற மனித அறிவின் வெளிப்பாடுதான் மருத்துவ அறிவியலாக வளர்ந்துள்ளது.

ஏராளமான கருவிகளோடு, உடலின் எந்த ஒரு உறுப்பிற்குப் பதிலாகவும் செயற்கை உதிரிபாகங்களைப் பொருத்துகிற அளவிற்கு இன்றைய மருத்துவ அறிவியல் வந்து நிற்கிறது. மருத்துவ அறிவியலின் பாதையும், பயணமும் சரியான திசைவழியில் செல்கிறதா என்பதுதான் இன்றைய காலத்தின் கேள்வியாக நம் முன் நிற்கிறது.
‘இது தான் அறிவியல்பூர்வமானது’ என்று சான்றளிக்க உலகில் எந்த ஒரு அமைப்பிற்கும் அதிகாரம் கிடையாது. ஏனென்றால், அறிவியல் என்பது பன்முகத்தன்மை வாய்ந்தது. ஒற்றைத்தன்மையானது அல்ல. அறிவியல் என்பதை அறிந்துகொள்ள - உரசிப்பார்க்க பொது அளவுகோல் ஒன்றை யாரும் நிர்ணயித்துவிட இயலாது. இன்று நாம் மருத்துவ அறிவியலாக நம்பிக்கொண்டிருப்பது இயந்திரங்களை மட்டும்தான். ஆனால் கருவிகள் கண்டுபிடிக்காத தூரத்தில் உடலின் பல விளைவுகள் அமைந்துள்ளன.
உயிர் மறைவானது. அதனை அளவிடவோ, கண்டுபிடிக்கவோ கருவிகள் இல்லை. உடலின் அடிப்படை நோயான வலி மறைவானது. வலியின் தன்மையை கண்டுபிடிக்க இன்று வரை கருவிகள் இல்லை. மருத்துவ அறிவியல் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை மனித அறிவை, சிந்தனையை நம்பியிருந்தது. இன்றைய அறிவியலின் பாதை சிந்தனையைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு இயந்திரங்களை முன்னிறுத்துகிறது.
உதாரணமாக, ஒரு மனிதனுக்கு தலைவலி ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. மலச்சிக்கல் ஏற்பட்டு மலக்குடலில் மலம் தங்கிவிடுவதால் தலைவலி தோன்றலாம். நாம் சாப்பிட்ட உணவு இரைப்பையிலோ, சிறுகுடலிலோ செரிமானமாகவில்லை என்றால் தலைவலி தோன்றலாம். பசி ஏற்பட்டு சாப்பிடவில்லையென்றால் மண்ணீரல் பலவீனம் ஏற்பட்டு தலைவலி வரலாம். இன்னும், கல்லீரல் சோர்வாலும், சுவாசக் கோளாறாலும், உடல் வெப்ப நிலை மாறுபாட்டாலும் தலைவலி தோன்றலாம். இப்படி, தலைவலி ஏற்படுவதற்கு உள்ளுறுப்புக்கள் ரீதியாக அறுபதுக்கும் மேற்பட்ட காரணங்களை அடுக்குகிறது அக்குபங்சர். அப்படி ஏற்படும் வலியின் தன்மையை நூற்றுக்கும் அதிகமானதாக பட்டியலிடுகிறது ஹோமியோபதி. ஆனால், இதைப்பற்றியெல்லாம் எந்தக்கவலையும் இல்லாமல் தலைவலிக்கான காரணத்தை தலையிலேயே தேடிக்கொண்டிருக்கிறது -ஆங்கில மருத்துவத்தின் அறிவியல் கருவிகள்.

இங்கே மருத்துவ அறிவியலின் பாதை எங்கே செல்கிறது?
அறிவின் பின்னால் செல்லவேண்டிய கருவிகள் - அறிவிற்கு தலைமையேற்று வழிகெடுக்கிறது.

மருத்துவ அறிவியலின் இன்றைய வளர்ச்சி எத்தகையது?

முன்பெல்லாம் எலும்பு முறிவு ஏற்பட்டால் நம் கிராமத்து நாட்டு மருத்துவர்கள் முறிவு ஏற்பட்ட எலும்பை நேராக வைத்து இணைத்து வெளிப்பகுதியில் மரத்தட்டையாலான கட்டு ஒன்றைப் போட்டுவிடுவார்கள். மூன்று, நான்கு முறைகள் பத்து ரூபாய் கொடுத்து கட்டை புதுப்பித்துக் கொண்டால் போதும் - எலும்பு இணைந்துவிடும். இப்போது விஞ்ஞான மருத்துவர்கள் என்ன செய்கிறார்கள்? முறிவு ஏற்பட்ட எலும்பின் மேலுள்ள தோலைக்கிழித்து, தசையை அறுத்து உலோகத்திலான பிளேட்டை வைத்து அதன் நான்கு முனைகளிலும் ஸ்க்ரூ போட்டு தைத்து விடுகிறார்கள். சில மாதங்களில் எலும்பு தன்னியல்பில் இணைந்துவிடும். ஆனால் உள்ளே வைத்துத் தைக்கப்பட்ட உலோகம் என்ன ஆகும்? உடலிற்குச் சம்பந்தமில்லாத அந்நியப்பொருளை உடல் உள்ளே விட்டுவைக்காது. வலியையும், சீழையும் ஏற்படுத்தும். வலியை மறக்க - வலி நிவாரணியும், சீழ் வராமல் பாதுகாக்க நுண்ணுயிர்க்கொல்லி மருந்தும் கொடுக்கப்படும். ஓர் ஆண்டிற்குப்பிறகு மறுபடியும் ஒரு லட்ச ரூபாய் செலவுசெய்து உள்ளே சும்மாயிருக்கும் பிளேட்டை எடுத்துவிடலாம். இது கட்டாயமில்லை; வசதி வாய்ப்பு இருப்பவர்கள் செய்துகொள்ளலாம். இல்லாவிட்டால் அவ்வப்போது ஏற்படும் வலிக்கு மாத்திரைகளை உண்டு காலத்தைக்கடத்தலாம்.

எப்படிப்பட்ட எலும்பு முறிவாக இருந்தாலும் ஒரு சாதாரண கிராமத்து கட்டு போதுமானதாக இருந்தது. நம் அறிவியலின் தவறான வழிமுறை ஒரு எலும்பு முறிவிற்கு பல லட்சங்களைப் பறித்துக்கொண்டு புதிய நோய்களையும் பரிசாகத்தருகிறது. மருத்துவ அறிவியல் உண்மையிலேயே வளர்ந்து வருகிறதா? அல்லது நாம் மருத்துவ அறிவியலைத் தவற விட்டு விட்டு கருவிகளின் பின்னால் சென்று கொண்டிருக்கிறோமா?

இன்றைய விஞ்ஞானத்தைத் தீர்மானிக்கும் ஒற்றைச்சக்தியாக நாம் ஆங்கில மருத்துவத்தை மட்டுமே நம்பியிருக்கிறோம். ஆங்கில மருத்துவத்திற்கு எதிராகப்பேசும் எந்த ஒரு முறையையும் ‘அறிவியல் பூர்வமானது இல்லை’ என்ற நம் பொதுப்புத்தியில் ஏற்றி வைக்கப்பட்ட கருத்தால் புறந்தள்ளுகிறோம்.

உலக சுகாதார நிறுவனமும், உலக நாடுகளும் ஏற்றுக்கொண்ட ஒரு மருத்துவ முறை ஹோமியோபதி. இம்மருத்துவ முறை கடந்த இருநூறு ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. விஞ்ஞான வளர்ச்சியின் உச்ச கட்டம் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிற இந்த நூற்றாண்டில் கூட ஹோமியோபதி மருந்துகளில் என்ன இருக்கிறது என்பதை எந்த கருவியாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் ஹோமியோபதி அறிவியல் பூர்வமற்றது என்று கூறவும் வழியில்லை. ஏனென்றால் அம்மருந்துகளின் ஆற்றல் உலகம் முழுவதும் பயன்பாட்டு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. 

அறிவியல் என்பது கருவிகளைக் கடந்தும் இருக்கலாம் என்பதை ஏற்றுகொள்கிற பக்குவம் நமக்கு வரவேண்டும். இப்படியான சிந்தனைதான் அறிவியலை அதன் அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதாக அமையும்.

இன்னும், சராசரி மக்களுக்கு எட்டாத தூரத்தில் மருத்துவ அறிவியலின் ரகசியங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

# உலகத்திலேயே ஆறு நாடுகளில்தான் போலியோ சொட்டு மருந்து புழக்கத்தில் உள்ளது. தடுப்பு நடவடிக்கைகளே இல்லாத பல நாடுகளிலும் இன்று போலியோவின் தாக்கம் குறைந்துள்ளது.

# தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து விஞ்ஞானிகளில் ஒரு பிரிவினர் அதை எதிர்த்து வருகின்றனர். உலகம் முழுவதும் தடுப்பூசி மருந்துகளால் பாதிக்கப்பட்ட மக்கள் “தடுப்பூசி எதிர்ப்புச் சங்கம்”( Anti Vaccination League) ஒன்றை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் நடத்தி வருகிறார்கள்.

# சமீபத்தில் பீதியைக்கிளப்பிய சிக்கன்குனியா காய்ச்சலுக்கு தடுப்பு மருந்துகளோ, கட்டுப்படுத்தும் மருந்துகளோ கண்டுபிடிக்கப்படாத நிலையில் அந்நோய் தானே குறைந்துபோய் உள்ளது.

# திடீர், திடீரென பீதியைக்கிளப்பி பின் மறைந்து போகும் இந்த நோய்கள் உருவாகக் காரணம் என்று நம்பப்படும் கிருமிகளின் தோற்றம், அழிவு பற்றிய முழுமையான தீர்வுகள் இன்னும் முன்வைக்கப்படவே இல்லை. என்றாலும் வணிக ரீதியாக விற்பனை செய்யப்படும் எல்லா பொருட்களுக்குமான விளம்பரங்கள் அனைத்தும் கிருமிகளின் மீதே கட்டமைக்கப்படுகின்றன.

# ஆட்கொல்லி நோய் என நம்பப்படும் எய்ட்ஸுக்கு காரணமாகக் கூறப்படுவது - H.I.V. `என்னும் கிருமிதான். இந்த கிருமியக் கண்டுபிடித்த விஞ்ஞானி டாக்டர்.லுக் மோன்பிக்னியர் “H.I.V. கிருமி எய்ட்ஸுக்கு காரணமல்ல: இதைப்பற்றிய ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளில் எக்கச்சக்கமான குளறுபடிகளும், பித்தலாட்டங்களும் உள்ள்ன” என்று ( மியாமி ஹெரால்டு 23.12.1990) தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் . . . . . வித விதமான குழப்பங்களும், எண்ணற்ற கேள்விகளும் கண்டுபிடிப்புகளின் பின்னால் வருகின்றன என்றாலும் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் முழுமையாவதற்கு முன்பே யாருடைய கட்டாயத்தினாலோ சந்தைக்கு வந்துவிடுகின்றன.

அமெரிக்காவில் சர்க்கரை நோய் முதல் முறையாக ஒரு நபருக்குக் கண்டுபிடிக்கப்பட்டால் 6 மாதங்களுக்கு மருந்துகள் கொடுப்பதில்லை. ஏனென்றால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாகவே மாறுபடும் சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால் இங்கே சர்க்கரையின் அளவு ஒருமுறை கூடியதாகக் கண்டு பிடிக்கப்பட்டால் - அவருக்கு சாகிற வரை மருந்துகளைப் பரிந்துரைக்கிறார்கள். இங்கிலாந்தில் ஆங்கில மருத்துவ கருத்தோட்டங்களுக்கு எதிரான ஆய்வுகள் கவனிக்கப்படுகின்றன. இந்தியாவில் மாற்றுச்சிந்தனைக்கான இடம் முற்றாக நிராகரிக்கப்படுகிறது.

வெவ்வேறு விதமான மாற்று மருத்துவங்களின் எல்லா நிரூபணங்களும் ஆங்கில மருத்துவத்தின் ஆய்வுக்கூடங்களிலிலேயே நிகழவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது எப்படி அறிவியல் ஆகும்?

விதம் விதமான ரசாயன மருந்துகளையும், நவீன அறுவை சிகிச்சைகளையும் புறந்தள்ளி விட்டு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். மண்ணில் போடும் ரசாயன உரங்களை தவிர்த்து விட்டு எப்படி இயற்கை விவசாயம் சாத்தியமோ அதே போல ரசாயன மருந்துகளை கைவிட்டு இயற்கையான ஆரோக்கிய வாழ்வை அமைத்துக்கொள்வதும் சாத்தியமே.

இவ்வகையான இயற்கை வழி வாழ்வியலை மையமாகக்கொண்ட இயற்கை மருத்துவத்தை பயிற்றுவிக்க உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான அறிவியல் பல்கலைக்கழகங்களும், பயிற்சிபெற்ற ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இருக்கவே செய்கிறார்கள். மாற்று மருத்துவங்கள் குறித்த உலக நடப்புகள் அனைத்தும் இந்தியா போன்ற அடிவருடி அரசாங்கங்களால் மூடி மறைக்கப்படுகின்றன.

இந்திய மருத்துவப் பல்கலைக்கழகங்களில் கூட இரண்டு விதமான பாடத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

அதில் ஒன்று கிருமிகளால் நோய்வருகிறது என்று கூறும் ஆங்கில மருத்துவ (MBBS) பாடத்திட்டம். 

இன்னொன்று, கிருமிகளால் நோய் பரவுவதில்லை என்று கூறும் இயற்கை மருத்துவ (BNYS) பாடத்திட்டம். 

ஆனால், இதே விதமான இயற்கைப் பாடத்திட்டத்தைக் கொண்டிருந்த சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மருத்துவங்களின் பாடங்கள் சமீபத்திய வருடங்களில் ஆங்கில மருத்துவ அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளன.

இந்த இரண்டு வகை மருத்துவக் கோட்பாடுகளும் சுதந்திரமாக அனுமதிக்கப்பட வேண்டும். அது தான் அறிவியல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

ஒற்றைத்தன்மையை - ஒரு மருத்துவத்தை வலியுறுத்துவதுதான் மருத்துவ அறிவியல் என்றால் . . அந்தச் சர்வாதிகாரத்தைப் புறக்கணிப்பதில் தவறேதும் இல்லை.

Thanks to Umar
---------------------------------------------------------------------------
சிந்தியுங்கள் . . . . !
விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

THINK . . . . . ! RAISE YOUR CONSCIOUSNESS.
---------------------------------------------------------------------------
தங்களுக்கு இந்த POST நல்லதொரு கருத்தினை தங்களுக்கு கொடுத்ததாக தாங்கள் நினைத்தால் SHARE செய்யுங்கள்.

If you find this POST as a useful message then SHARE.


நன்றி : அக்கு ஹீலர் மோகன்ராஜ்
https://www.facebook.com/mohanraj.nagarajan.5

51 நோய்களுக்கு மூல காரணம் தெரியாத ஆங்கில மருத்துவம்...


1.எய்ட்ஸ் 2.நெஞ்சு வலி 3.குடல் வால்(அப்பன்டிசைட்டிஸ்) 4.இருதய இரத்தகுழாய்களில் அடைப்பு 5.தலை வழுக்கை 6.கண்பார்வையற்ற நிலை 7.ஆஸ்துமா 8.உடலில் தோன்றும் கட்டிகள் முதல் புற்று நோய் வரை 9.கண் புரை 10.தலை முடிவளர, நரையை அகற்ற 11.கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ (அ) பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுவது 12.பிறவிக் கோளாறுகள் 13.காது கேளாமை 14.நீரிழிவு நோய் 15.கர்பப்பை சம்பந்தமான அனைத்து நோய்கள் 16.வலிப்பு நோய்,மன நோய்கள் 17.மூளைக் காய்ச்சல் 18.உடல் நிறம் கருப்பயினும் சிவப்பாக்குதல் 19.மார்பக வளர்ச்சிக்கு 20.புரையோடிய புண் 21.மரபணு நோய்கள் 22.குளுகோமா எனும் கண்வலி நோய் 23.கழுத்து வீக்கம்(தைராய்டு) 24.ஹெர்னியா எனும் குடலிறக்க நோய் 25. அதிக மற்றும் குறை இரத்த அழுத்தம் 26.விரை வீக்கம் 27.பைத்தியம் 28. ஞாபக மறதி,ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய 29.குழந்தையின் உயரத்தை கூட்ட 30.சாதாரணமாக ஏற்படும் கண்பார்வை குறைபாடுகள்,கிட்டப் பார்வை,தூரப்பார்வை 31.ஆணுறுப்பு வளர்ச்சி ,வீரியம் 32.பற்களை உறுதிபடுத்தஎன்று கால்சியம் மருந்துகள் மூலம் சிகிச்சையளிப்பது. 33.மஞ்சள் காமாலை,கல்லீரல் மர்ம நோய்(Hepatitis)மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் 34.இரத்தப் புற்று நோய் 35.வெண் குஷ்டம் 36.உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல் 37.மூலை வளர்ச்சி குறைவு 38.மாரடைப்பு நோய் 39.குண்டான உடம்பு மெலிய 40.பக்கவாதம் 41.உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய் 42.மூலம் மற்றும் பவித்ரம் 43.வாலிப சக்தியை மீட்க 44.குறைந்த வயதில் முதிர்ச்சி அடைந்த தோற்றம் 45.இள நரை 46.ருமாட்டிக் இருதய நோய் 47.ஆண்மைக் குறைவு விரைவில் ஸ்கலிதம் 48.கழுத்துவலி மற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும் 49.திக்குவாய் 50.சிறு நீரகக் கற்கள்,பித்தப்பை கற்கள்,சிறு நீர்ப்பை கற்கள் 51.காலில் இரத்த நாளங்கள் வீக்கமடைந்து புடைத்து காணப்படுதல்( வேரிகோஸ் வெய்ன்)
இவைதான் மூல காரணம் நிரூபணாம் பண்ணாத நோய்கள். 
ஆனால் அவர்கள் அனைத்திற்கும் காரணாம் கற்பிப்பார்கள்
நன்றி : அக்கு ஹீலர் மோகன்ராஜ்
https://www.facebook.com/mohanraj.nagarajan.5

சிகிச்சை இல்லாத நோய்கள்....

There is no treatment or medicine to cure certain diseases.
Giving medicine or advertising to cure that diseases is illegal as per drug and medical act 51.
See below the Drug and Medical ACT 51.

Prohibition of certain medical advertisements.

51. —(1) No person shall publish or cause to be published —
(a) any medical advertisement which directly or indirectly claims, indicates or suggest that the article advertised 
will prevent, alleviate or cure any disease or condition specified in the First Schedule;


FIRST SCHEDULE
Section 51 (1) (a).
DISEASES AND CONDITIONS
1. Blindness.
2. Cancer.
3. Cataract.
4. Drug addiction.
5. Deafness.
6. Diabetes.
7. Epilepsy or fits.
8. Hypertension.
9. Insanity.
10. Kidney diseases.
11. Leprosy.
12. Menstrual disorders.
13. Paralysis.
14. Tuberculosis.
15. Sexual function.
16. Infertility.
17. Impotency.
18. Frigidity.
19. Conception and pregnancy.

see : www.hsa.gov.sg/.../etc/.../legislation/medicines_act.Par.44183.File.dat/

Thursday, September 5, 2013

மருத்துவம் : சோனியாவுக்கு அமெரிக்கா – மக்களுக்கு மார்ச்சுவரியா ?


டந்த ஆகஸ்ட் 26-ம் தேதி மக்களவையில் நடந்த உணவு பாதுகாப்பு சட்டம் பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு வாக்களிப்பதற்காக காத்திருந்த சோனியா காந்திக்கு குமட்டலும் வாந்தியும் ஏற்படவே, அவரை உடனடியாக அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
சோனியா காந்தி
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் சோனியா காந்தி.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சோனியாவை எய்ம்ஸ் இயக்குநர் ஆர்.சி.டேகா மற்றும் டாக்டர் நிதீஷ் நாயக் மற்றும் கார்டியோ நியூரோ பிரிவு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். மழைக்காலமாக இருப்பதால் சளித்தொற்று அதிகமாகி, அதற்கு பயன்படுத்திய மருந்துகள் இரைப்பை சிக்கலையும் வாயுக் கோளாறையும் உருவாக்கி இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.
நாட்டின் தலைவியான சோனியா காந்திக்கு சாதாரண சளித் தொல்லைக்கே அவசர பிரிவு பரிசோதனைகள் கிடைத்திருப்பதும், சாதாரண ஏழை மனிதர்கள் மாரடைப்பே வந்து போனாலும், அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி விட மாட்டார்கள் என்பது இருக்கட்டும்.
அத்தகைய ஏழை மக்களுக்கு உணவு வழங்குவதை உத்தரவாதம் செய்யும் மசோதாவை சோனியாவின் கனவுத் திட்டம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இப்படி ஏழை பாழைகளுக்கு உண்டி கொடுக்கும் கனவை நனவாக்கும் அன்னை சோனியாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டால் அது சாதாரணமானதில்லையே? மேலும் அதே ஏழை பாழைகளுக்கு கிடைக்கும் அரசு மருத்துவமனையில்தான் சோனியாவும் சிகிச்சை எடுத்திருக்க வேண்டும் என்று யாரேனும் கேட்க முடியுமா? குறைந்த பட்சம் இந்தியாவில்தான் மருத்துவம் எடுக்க வேண்டும் என்று இவரை மட்டுமல்ல வேறு தலைவர்களைத்தான் கோர முடியுமா?
இந்த சளித் தொல்லைப் பிரச்சினைக்காகவே 2011-ம் ஆண்டு அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளித்த மருத்துவர்களுடனும் டெல்லி மருத்துவக் குழுவினர் ஆலோசனை நடத்தியுள்ளனர். எதற்கும் இருக்கட்டும் என்று மேல் சோதனைக்காக சோனியா அமெரிக்கா கிளம்பி விட்டிருக்கிறார். இனி இவரது கனவுத் திட்டத்தில் வரும் ஏழைகளுக்கு இந்நாட்டில் என்ன மருத்துவ வசதி கிடைக்கிறது என்பதை பார்ப்போம்.
தவ்லத் பர்வீன்
படம் : நன்றி தினகரன்
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள லெப்பைக் குடிக் காட்டைச் சேர்ந்தவர் தவ்லத் பர்வீன். 4 குழந்தைகளுக்கு தாயான அவர் இந்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது மருத்துவர் வயிற்றில் பஞ்சை வைத்து தைத்து விட, ஸ்கேனில் அந்த விபரம் தெரிந்த பிறகு கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த பஞ்சையும், அழுகிப் போன நிலையில் இரண்டு குடல் துண்டுகளையும் எடுத்திருக்கிறார்கள். 25-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டிருக்கிறார்.
அதே போன்று அரியலூர் வி.கைகாட்டியை அடுத்த குடிசல் கிராமத்தைச் சேர்ந்த சுமதி, அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு வயிற்று வலியால் துடித்திருக்கிறார். கடந்த 18-ம் தேதி சுண்டக்குடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவரது பிறப்பு உறுப்பு வழியாக மூன்று ரப்பர் கிளவுஸ்களை எடுத்திருக்கின்றனர். சுமதியின் கர்ப்பப்பை சீழ் பிடித்திருக்கிறது.
இந்தியா எங்கும் அரசு மருத்துவமனைகளில் ஏழை மக்களின் உயிரோடு விளையாடுவது அன்றாட நிகழ்வாகியிருக்கிறது. இதனால்தான் இந்தியாவில் சிகிச்சை எடுப்பது முட்டாள்தனம் என்பது சோனியா போன்ற பெருந்தகைகளுக்கு தெரிந்திருக்கிறது. ஒருவேளை உயிரை எடுக்கும் இந்த சிகிச்சைகளிலிருந்து அதிர்ஷடவசமாக தப்பினாலும் மருந்துகளை வாங்குவதில் மிச்சமிருக்கும் வாழ்க்கை பறி போய்விடும் அளவுக்கு அவற்றின் விலைகளை உயர்த்தி பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடிக்க இந்திய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இதுதான் இவர்களது உண்மையான கனவுத் திட்டங்கள்.
1979-ல் மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையத்தின் மூலம் 200 மருந்துகளின் விலைகள் குறைந்த பட்ச வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டன. படிப்படியாக அந்த பட்டியலில் இருந்த மருந்துகள் நீக்கப்பட்டு இப்போது 74 மருந்துகளுக்கு மட்டுமே விலைக் கட்டுப்பாடு இருக்கிறது. தற்போது தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலின்படி 348 மருந்துகளுக்கு மத்திய மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் மருந்து கம்பெனிகள் வைத்த விலையின் சராசரியை எடுத்து கட்டுப்பாட்டு விலையாக வைத்திருக்கிறது.
இதனால் மருந்துகளின் விலை கணிசமாக உயர்ந்திருக்கின்றன.
உதாரணமாக, கிளாக்சோ நிறுவனத்தின் ஆகுமென்டின் என்ற ஆண்டிபயாடிக்கின் விலை ரூ 266. இதே மருந்தை இந்திய நிறுவனமான மேன்கைண்ட் ரூ 75-க்கும் குறைவாக விற்கிறது. இப்போது புதிய விலையாக ரூ 141 என்று அரசு நிர்ணயித்திருக்கிறது. ரூ 75-க்கு விற்று லாபம் பார்க்க முடியும் மருந்துக்கு ரூ 141 என்று விலை உயர்த்துவதுதான் அரசின் மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் மருந்து வழங்குவதற்கான நடைமுறையாம்.
ஐடிபிஎல்1961-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐடிபிஎல் எனப்படும் இந்திய மருந்து மற்றும் மருந்துப் பொருட்கள் நிறுவனம் குறைந்த விலையில் மருந்துகளின் அடிப்படை வேதிப் பொருட்களை உற்பத்தி செய்து வந்தது. 1970-ல் பைசர் நிறுவனம் ரூ 1.25-க்கு விற்ற டெர்ராமைசின் என்ற மாத்திரையை 25 பைசாவுக்கு உற்பத்தி செய்து விற்றது. அதே போல ஃபுல்ஃபோரா என்ற தனியார் மருந்து நிறுவனம் ரூ 32-க்கு விற்ற ஜெண்டாமைசின் என்ற ஊசி மருந்தை ஹிந்துஸ்தான் ஆண்டிபயாடிக்ஸ் என்ற பொதுத்துறை நிறுவனம் ரூ 7-க்கு விற்றது. இதனால் அந்த இரண்டு தனியார் நிறுவனங்களும் தத்தமது மருந்துகளின் விலையை குறைத்து விற்க கட்டாயப்படுத்தப்பட்டன.
இத்தகைய பொதுத்துறை நிறுவனங்களை இழுத்து மூடவோ அல்லது தனியாரிடம் விற்று விடவோ செய்து விட்டு தனியார் நிறுவனங்கள் விற்கும் மருந்து விலைகளையும் கட்டுப்படுத்தாமல் பொதுமக்களிடமிருந்து கொள்ளை அடிக்க வழி வகுத்து தருகிறது மத்திய அரசு.
ஒரு புதிய மருந்தை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம் 20 ஆண்டுகள் காப்புரிமை காலத்தின் போது அதிக விலை வைத்து லாபம் சம்பாதிக்கிறது. காப்புரிமை காலம் முடிந்த பின்னரும் புதுப் புதுப் பெயரில் அதே மருந்தை அதிக விலைக்கு விற்று கொள்ளை அடிப்பது வாடிக்கையாக உள்ளது. அத்தகைய மருந்துகளை இந்திய நிறுவனங்கள் குறைந்த செலவில் உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்றும் லாபம் சம்பாதிக்க முடிகிறது.
ஆனால், அந்த விலைகளை விட 2 மடங்கும் அதற்கு மேலும் உயர்த்தி பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு சேவை செய்வதையே தம் லட்சியமாக செயல்படும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்திக்கு நன்றிக் கடனாக அமெரிக்காவில் அவர் அந்த நிறுவனங்களால் சிறப்பாக கவனித்துக் கொள்ளப்படுவார் என்று நம்பலாம்.
நன்றி : ஜூனியர் விகடன், நக்கீரன்.
நன்றி : வினவு.காம் (http://www.vinavu.com/2013/09/04/health-scare-for-people/)

Wednesday, September 4, 2013

மோசடியும் மோடியும்தான் பாசிசம்!




மனிதகுல வரலாறு பல்வேறு மகத்தான தலைவர்களை வழங்கியுள்ளது. அவர்கள் தங்கள் உடல், பொருள் அனைத்தையும் மக்கள் நலனுக்காக அர்ப்பணித்தவர்கள். இவர்கள் மக்கள் மனங்களில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதேவேளையில் தங்களுடைய சுயலாபத்திற்காக, ஆட்சி அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொள்வதற்காக கோடிக்கணக்கானவர்களை அழித்தொழித்து அவர்களின் கல்லறைகளின்மீது அமர்ந்து கொண்டு கொக்கரித்தவர்களையும் வரலாற்றில் படித்து இருக்கிறோம். அவர்களின் உருவத்தை அரக்கர்களாக சித்தரித்துத்தான் மக்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர் ஜெர்மனி ஹிட்லர். இவர் பாசிசக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டவர். பாசிசக்கொள்கையின் அடிப்படை நோக்கமே தனக்குண்டான எதிரியை திட்டமிட்டு உருவாக்கி அவர்களை அழித்தொழித்து பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையைப் பெறுவது. அதற்கான அனைத்துவிதமான மோசடிகளையும் செய்வது. இதைத்தான் ஜெர்மன் மக்களை சுற்றியிருக்கும் தீமைகளுக்கெல்லாம் காரணம் யூதர்கள்தான் என திட்டமிட்டு தனது வகையறாக்கள் மூலம் ஜெர்மனி முழுவதும் ஹிட்லர் பிரச்சாரம் செய்தான்.

உலகப்போரில் ஜெர்மனி தோற்றதற்கு யூதர்கள்தான் காரணம் என்று அவன் செய்த பிரச்சாரம். ஜெர்மன் மக்கள் மத்தியில் யூதர்களின் தேசப்பற்றும், நாட்டின் பிரதான விசுவாசமும் சந்தேகிக்கப்பட்டது. யூதர்களுக்கு எதிரான பொய்யை. திரும்பத் திரும்ப பயன்படுத்தியதன் விளைவாக மக்களின் ஆதரவோடு லட்சக்கணக்கான யூதர்களை ஹிட்லர் படுகொலை செய்தான். ஒரு மாபெரும் பொய்யைச் சாதகமான கருவியாக பயன்படுத்திக் கொண்டு ஒரு இனத்திற்கு எதிராக சதி செய்தான் ஹிட்லர். இதுதான் பாசிசத்தின் அடிப்படை குணாம்சங்களாகும்.

அதே பாணியைத்தான் இந்தியாவில் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். பின்பற்றி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றைய பா.ஜ.க. தன்னுடைய பாசிசக் கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்தான் நரேந்திரமோடி. இவர் கடந்த காலங்களில்  ஆர்.எஸ்.எஸ்.-ன் பிரச்சாரகராக செயல்பட்டபோது, இவரை ஒருமுறை பேட்டி கண்ட எழுத்தாளர் அசீஷ்நந்தி, ‘செமினார்’ (2008) என்ற பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில்.

உள நோய் மருத்துவர்கள், உளநிலை மருத்துவர்கள் மற்றும் உளநூல் வல்லுனர்கள் ஆகியோர் ‘ஆதிக்க மனோபாவம்’ கொண்ட ‘தனி மனித நிலை’ பற்றி பல்லாண்டு ஆய்விற்குப் பின் வரையறுத்திருக்கும் எல்லா அடிப்படைக் கூறுகளையும் கொண்ட மனிதராக,  அமைதியான ஆற்றொழுக்கான தொனியில் அவர் இந்தியாவிற்கு. எதிரான அண்டத்தின் சதிக்கோட்பாட்டை விவரித்து, என்னை தூக்கிவாரிப் போட்டது. நரேந்திர மோடி ஒவ்வொரு முஸ்லீமையும் தேசத் துரோகியாகவும், பயங்கரவாதியாகவும் சித்தரித்தார். அவருடைய பேட்டியின் முடிவில் இலக்கண ரீதியான ஒரு பாசிஸ்டாகவும், எதிர்கால கொலைகாரனாகவும், இன்னும் சொல்லப்போனால் கூட்டம், கூட்டமாக கொலை செய்யக் கூடியவராகவும்தான் அவர் எனக்கு தெரிந்தார்’’ என குறிப்பிடுகிறார்.

இப்படிப்பட்ட நரேந்திர மோடிதான் குஜராத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக முஸ்லீம்களுக்கு எதிரான விஷமப் பிரச்சாரத்தைத் திட்டமிட்டு நடத்தினார். குஜராத் மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டு ஆட்சியில் அமர்ந்தவுடன் ஹிட்லரின் பாசிசப் பாணியைப் பின்பற்றி முஸ்லீம்களைப் பொது எதிரியாக்கி இவர் நடத்திய படுகொலைகளை ஹிட்லரிசத்தின் இந்திய வடிவமாகத்தான் பார்க்க முடியும்.

இவருடைய ஆட்சிக்காலத்தில் ‘கோத்ரா ரயில் விபத்து’ சம்பவத்திற்குப் பிறகு மோடியின் வழிகாட்டுதலின் பேரில் தீ வைத்து எரிக்கப்பட்ட வீடுகள் 10,504, எரிக்கப்பட்ட கடைகள் 10,429, தீ வைத்துஎரிக்கப்பட்ட லாரிகள் 2,623 சொந்த நாட்டிலேயே அகதிகளானவர்கள் 1,13,697. படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம்களின் எண்ணிக்கை குறித்து இன்றுவரை முழுமையான தகவல் இல்லை.

இத்தகைய மகா பாதகச் செயலைச் செய்த நரேந்திர மோடியிடம் ‘ராய்ட்டர்’ என்ற செய்தி நிறுவனம், “இந்தப் படுகொலைகள் சம்பந்தமாக தாங்கள் வருத்தப்பட்டதுண்டா?’’ என்று கேள்வி கேட்டதற்கு அவர் அளித்த பதில், “ஒரு காரை ஓட்டிக்கொண்டு போகும் போது, ஒரு சிறு நாய்க்குட்டி காரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்து விட்டால், நமக்கு வருத்தமாகத்தானே இருக்கும். நான் முதல்வராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நானும் ஒரு மனிதப் பிறவிதானே, சோகமான ஒன்று நிகழும்போது வருத்தம் ஏற்படுவது இயல்புதானே’’ என்று கூறியிருக்கிறார்.

குஜராத்தில் சிறுபான்மை முஸ்லீம்கள் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டதும், ஓடும் காரில் நாய் அடிபட்டு செத்ததும் நரேந்திர மோடிக்கு ஒன்றுதானாம். இம் மனிதரைத்தான் அழிவுப் பாதைக்குச் செல்லும் இந்தியாவைப் பாதுகாக்க ராமனே அவதரித்து வந்துள்ளதாக பா.ஜ.க.வும் ஊடகங்களும், மிகப்பெரிய அளவில் செய்தியாக்கி புகழ்ந்து வருகின்றன. இவரைப் பற்றி புகழ்பாடும் ஊடகங்கள் இவருடைய ஆட்சிக்காலத்தில் குஜராத் சொர்க்கபுரியாக மாறிவிட்டதாகக் கூறுகிறார்கள். தேசிய சராசரி ஆண்டு வருமானத்தைவிட குஜராத்தின் சராசரி ஆண்டு வருமானம் அதிகரித்துள்ளதாகவும், இதுதான் வளர்ச்சியின் அடையாளம் என்றும், இதற்கு முக்கிய காரணம் நரேந்திர மோடிதான் எனவும் வாதிடுகின்றனர்.

இந்தியாவிலேயே அதிகமாக ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் பிறப்பதும், இறப்பதும் குஜராத்தில்தான் என்பதை யாராலும் மறைத்து விட முடியாது. டெகல்கா இணையதளம் சமீபத்தில் குஜராத் குறித்து அதிர்ச்சியூட்டும் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. தலித் மக்கள் வாழக்கூடிய பகுதியில் முறையான குடிநீர்கூட  வழங்கப்படுவதில்லையாம். அதேபோல் தலித் மற்றும் உயர்சாதியினர் வாழக்கூடிய கிராமங்களில்  தலித் மக்களுக்கு என்று குடிநீர் எடுக்க தனியாக நேரம் ஒதுக்கி போர்டுகள் தொங்கவிடப்பட்டுள்ளனவாம். குஜராத் மாநிலத்தில் தொழிற்துறை ஓரளவிற்கு வளர்ச்சி பெற்றிருந்தாலும், பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட கப்பல் உடைக்கும் தொழில், ரசாயனப் பொருட்கள் உற்பத்தியும்தான் குஜராத்தின் வருமானப் பெருக்கத்திற்கு முக்கிய காரணமாம். இதை ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து விடுகின்றன. இதனால் குஜராத் மாநிலத்தின் இயற்கையும், சுற்றுச்சூழலும் பேரழிவிற்கு உள்ளாக்கி வருகிறது. தொழில் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் உழைப்பு ஒட்டச் சுரண்டப்படுகிறது.


கடந்த ஆண்டுகளில் மத்திய அரசு ஒதுக்கிய ரூபாய் 57 ஆயிரம் கோடி ரூபாயில் சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாயை குஜராத் அரசு வீணடித்து விட்டதாக மத்திய தனிக்கைத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது கோத்ரா ரயில் விபத்திற்கு பிறகு ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு முறையான நிவாரணத்ததைக்கூட வழங்கவில்லை. போலி என்கவுண்டரில் முஸ்லீம் இளைஞர்களை சுட்டுக்கொன்றதற்காக நரேந்திர மோடிக்கு உச்சநீதிமன்றம் பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களிடையே பகைமையை தூண்டியதற்காக குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி இந்திய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் தண்டிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் நிபுணர்களின் ஒருவரான ராஜீ ராமசந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆனால் நரேந்திரமோடி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை பயன்படுத்தி
சமூக வளத்தளாங்களில் மேற்கொண்டு வரும் பிரச்சார மோசடி நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இப்படிப்பட்ட நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க அறிவித்து வருவது வெட்கக் கேடானது. பா.ஜ.க வும், ஒரு சில ஊடகங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் உதவியோடு நரேந்திரமோடியை இந்தியாவின் பிரதமராகக் கொண்டுவர முயற்சி செய்வது பாசிச ஆட்சியைக் கொண்டு வருவதற்காகத்தான் என்பதை எளிதில் புரிந்து கொள்ளமுடியும்.

பாசிச அச்சுறுத்தலுக்கு எதிராக சமர் புரியத் தயாராவோம்.

(கட்டுரையாளர்: ஏ.ஐ.ஒய்.எஃப். மாநில துணைத் தலைவர் மற்றும் சேலம்            மாவட்டச் செயலாளார். தொடர்புக்கு: 9894363191)

நன்றி : ஜனசக்தி 29 ஆகஸ்ட் 2013 இதழ்.


   

 

Tuesday, September 3, 2013

சாகா சரித்திரம்!




ரோக மருத்துவன் ; ரெளத்திரன் ;
மக்களின் ரட்சகனாம்...
தேகம் தளரினும் லட்சிய
நோக்கம் தளர்ந்திடாதான்
போகம், பதவி, பொருளென்
றெதிலுமே பற்றிலாதான் ;
சாகவும் அஞ்சான் சமத்துவம்
மண்ணில் செழித்திடவே!

நோகாது நுங்குண்ணும் நீசர்
நெறியினை நாடிடாதான் ;
ஏகாதி பத்தியம் எவ்வடி
வாயினும் ஏற்றிடாதான் ;
வேகம் விவேகம் இயைந்த
இவனுக்கோர் மாற்றிலாதான் ;
சாகச வாழ்க்கையின் சாகா
சரித்திரம் சேகுவேரா!!

-    பாண்டூ
-    தமிழ்நாடு கலைஇலக்கியப்பெருமன்றம்
-    6 ஜவுளிக்கடை வீதி,    சிவகாசி – 626123
-    9843610020
 நன்றி : ஜனசக்தி - 13 ஜூலை 2013 இதழ்