ரோக மருத்துவன்
; ரெளத்திரன் ;
மக்களின் ரட்சகனாம்...
தேகம் தளரினும்
லட்சிய
நோக்கம் தளர்ந்திடாதான்
போகம், பதவி, பொருளென்
றெதிலுமே பற்றிலாதான் ;
சாகவும் அஞ்சான்
சமத்துவம்
மண்ணில் செழித்திடவே!
நோகாது நுங்குண்ணும்
நீசர்
நெறியினை நாடிடாதான் ;
ஏகாதி பத்தியம்
எவ்வடி
வாயினும் ஏற்றிடாதான் ;
வேகம் விவேகம் இயைந்த
இவனுக்கோர் மாற்றிலாதான் ;
சாகச வாழ்க்கையின்
சாகா
சரித்திரம் சேகுவேரா!!
- பாண்டூ
- தமிழ்நாடு கலைஇலக்கியப்பெருமன்றம்
- 6 ஜவுளிக்கடை
வீதி, சிவகாசி
– 626123
- 9843610020
நன்றி : ஜனசக்தி - 13 ஜூலை 2013 இதழ்
No comments:
Post a Comment