Sunday, January 6, 2013

முதலாளித்துவ அமைப்பின் கையாலாகாத் தனமும் சோஷலிச அமைப்பின் உறுதியும்


சமதர்மம் ஆளும் கியூபா நாட்டில்
அமெரிக்கச் சதியால் வளங்குறை இருப்பினும்
வேலை யில்லா நிலைமை இல்லை
நோய்குணப் படுத்தக் கட்டணம் இல்லை
சீற்றம் கொண்ட காற்றின் முன்னால்
ஆற்றல் கொண்ட அமெரிக்க அரசு
கோழையாய் மக்களைக் காவு கொடுக்க
ஏழை எனினும் கியூபா அரசு
வளர்ப்புப் பிராணியும் சாகாது காத்தது
தளரா சமதர்ம அறமென அறிவீர்
(சோஷலிசம் ஆளும் கியூபா நாட்டின் மீது (வல்லரசான) அமெரிக்கா (பொருளாதாரத் தடை என்ற பெயரில்) செய்யும் சதிச் செயல்களால், அந்நாடு வளத்தில் குன்றி இருந்தாலும், அங்கு வேலை இல்லாத் திண்டாட்டம் இல்லை; (மக்களுக்கு ஏற்படும்) நோய்களைக் குணப்படுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. சீற்றத்துடன் புயல் காற்று வீசிய பொழுது ஆற்றல் மிக்கதாக நினைக்கப்படும் அமெரிக்க அரசு ஒரு கோழையைப் போல் தன் மக்களில் பலரைக் காவு கொடுத்தது. (இது முதலாளித்துவ அமைப்பின் கையாலாகாத் தனம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்) ஏழ்மையில் இருந்தாலும் கியூபா அரசு தன் மக்களை மட்டுமல்லாமல் அவர்களுடைய வளர்ப்பப் பிராணிகளிலும் ஒரு உயிரைக் கூட, காவு கொடுக்காமல் காத்தது, உறுதியான சோஷலிச அமைப்பின்அறத்தினால் தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.)
- இராமியா

No comments:

Post a Comment