Monday, March 11, 2013

9.3.2013 அன்று காலை 4 மணியளவில் இயற்கை எய்திய எழுத்தாளர் ஞானக்குயில் கவிஞர் செ.ஞானன் மறைவுக்கு கவிதாஞ்சலி


உனக்கு இரங்கற்பா எழுதுவதாய் இல்லை !
இறந்தவர்க்குதானே இரங்கற்பா!?

இன்னமும் நீ .................
கதைகளூடே கதைத்துக் கொண்டுதான் இருக்கிறாய்
கவிதைகளூடே உறவாடிக் கொண்டுதான் இருக்கிறாய்

இசையுனூடே அசைத்துக் கொண்டுதான் இருக்கிறாய்
நாவல்களூடே நகர்த்திக் கொண்டுதான் இருக்கிறாய்

தத்துவங்களூடே தர்க்கம்செய்து கொண்டுதான் இருக்கிறாய்
வார்த்தைகளூடே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய்

வார்த்தைகள் வாழவைக்குமாம்
நீயோ, வார்த்தைகளாகவே வாழ்கிறாய்...

இன்னமும் உன்...
மூச்சில் தான் நாங்கள்
உயித்திருக்கிறோம்!       

உனக்கு இரங்கற்பா எழுதுவதாய் இல்லை !
இறந்தவர்க்குதானே இரங்கற்பா!?
                                             -    பாண்டூ


No comments:

Post a Comment