(கவிஞர் ஞானக்குயில் ஞானனுக்கு கவிதாஞ்சலி)
இதயத்தின் இமைகளில்
சொட்டு சொட்டாய் சோகம் ............
இனியென்று கேட்குமோ
ஞானக்குயிலின் ராகம் ..............?
உதயத்தின் அஸ்தமனத்தை
விதியென்று நம்பியே விட்டுவிடலாம்
உனக்கான மரணத்தை
சதியென்பேன்! எமனின் சதியென்பேன் .......!!
எந்தமண்ணில் பிறந்தபோதும்
கந்தகமண்தான் உனக்கு
கலைஇலக்கிய மண்......
பாரதியின் அக்கினிக்குஞ்சின் பாட்டுச் சிறகே......!
ஜீவாவின் ஆன்ம ஜீவிதமே...........!
‘வா’ரதியெனில் வருவாளே அந்தக்கவிதைப்பெண்.....
தேவாதி தேவருக்கு திருடினனோ உன்னை....?
எனக்கு நீயோர் தென் மேற்கு பருவகாற்று..........
எங்களுக்கு நீயோர் பொதிகையின் பூங்காற்று.........
கந்தகப்பூக்களில் பூத்த கவிதை ரோஜா நீ..........
தமிழ்ச்சுடரில் ஏற்றிய தனித்தமிழ் சுடர் நீ........
கலை இலக்கியப் பெருமன்றத்தின்
விலையில்லா மாணிக்கமே.....! ஞானக்குயிலே
நிலைகுலைந்து போனோம்......நீ இங்கு காணோம்....!
கவிஞன் நீ........ கதாசிரியன் நீ....... கட்டுரையாளனும் நீ...........
நாவல்கள், நாடகங்கள் நல்ல தத்துவங்கள்..........
எத்தனை எத்தனையாய் நீ.............
படைப்பாளன் ஒருவன் பிரம்மன் என வேதம் சொல்கிறது........
படைப்பாளன் ஒருவன் ஞானன் என உலகம் சொல்கிறது.......
பிரம்மனுக்கு உன்மேல் பொறாமை...........
அதானால்தான் நீயின்று இல்லாமை..........
உன் முன்னால்
முதன் முதலாய் அரங்கேறிய எனது முதல் கவிதை
“மரணம் ஒழிக”
அதையே வழிமொழிகிறேன் இன்னும்
மரணம் ஒழிக!...... மரணம் ஒழிக.......!!
- v.s.ராம்தாஸ்
No comments:
Post a Comment