Thursday, January 30, 2014

சோசலிசமும் மதமும்


மதம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம் என்று பிரகடனப்படுத்த வேண்டும். இந்தச் சொரற்களில் சோஷலிஸ்டுகள், மதத்தின்பால் தங்களுடைய மனப்பான்மை என்ன என்பதைப் பொதுவாக வெளிப்படுத்துகிறார். ஆனால் எத்தகைய தவறான எண்ணமும் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக இந்தச் சொற்களின் அர்த்தத்தை மிகத் துல்லியமாக வரையறுக்க வேண்டும். அரசாங்கத்தைப் பொருத்தவரையில் மதம் தனிப்பட்ட விவகாரமாகக் கொள்ளப்பட வேண்டும் என்று நாம் கோருகிறோம்.

ஆனால் கட்சியைப் பொருத்தவரையில் மதத்தை ஒரு தனிப்பட்ட விவகாரமாக எந்தக் காரணத்தைக் கொண்டும் கருத முடியாது. மதம் அரசாங்கத்தின் சார்புடையதாக தொடர்பு கொண்டதாக இருக்கக்கூடாது, மத சம்பந்தமான ஸ்தாபனங்கள் சர்கார் அதிகாரத்துடன் எவ்வித தொடர்பும் கொண்டிருக்கக்கூடாது. எவருக்கும் எந்த மதத்தைத் தழுவுவதற்கும் பரிபூரண உரிமையுண்டு. எந்த மதத்தையும் தழுவாமல் அதாவது நாத்திகனாக இருக்கவும் உரிமையுண்டு ஒவ்வொரு சோஷலிஸ்டும் பொதுவாக ஒரு நாத்திகனாகத்தான் இருக்கிறார்.

மதத்தழுவலில் காரணமாகக் குடிமக்களிடையில் பாகுபாடு காட்டப்படுவது எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்றக்கொள்ள முடியாததாகும். அதைச் சிறிதும் சகிக்க முடியாது. அதிகார பூர்வமான அரசாங்க தஸ்தாவேஜிகளில் ஒரு குடிமகனின் மதச் சார்பைப் பற்றி வெறும் பெயரளவில் குறிப்பிடப்படுவது கூட கேள்விக்கிடமில்லாத படி நீக்கப்பட வேண்டியதாகும். ஸ்தாபனமாகியுள்ள மாதா கோவில்களுக்கு மானியங்கள் கொடுப்பது கூடாது. மத குருக்களின் நிறுவனங்களுக்கோ அல்லது வேறு எந்த மத சம்பந்தமான ஸ்தாபனங்களுக்கோ அரசாங்க அலவன்ஸ் கொடுப்பதுகூடாது.

இந்த மத சம்பந்தமான நிறுவனங்கள் நூற்றுக்கு நூறு சுயேட்சையாக உருவாக்கப்பட்டு நடத்தப்படுபவையாக இருக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படுவதன் மூலம்தான் பழைய அவமானகரமான, வெட்கக் கேடான, வெறுப்பிற்குரிய கடந்த காலத்திற்கு ஒரு முடிவு கட்ட முடியும் முன்பு அரசாங்கத்தின் நிலப்பிரபுத்துவ அமைப்பைச் சார்ந்து மாதா கோயில்கள், அதன் நிறுவனங்கள் இருந்தன.

ஸ்தாபிதமான மாதா கோயில்கள் மீது நிலப்பிரபுத்துவ ரீதியில் ரஷ்யக் குடிமக்கள் வாழ்ந்து வந்தனர். அப்போது மத்தியகால, எரிச்சலூட்டும் படியான பிறர் விஷயங்களில் தலையிடுகிற அருவருப்பான சட்டங்கள் முரண்பட்ட சமயக் கருத்துகள் கொண்டவர்களைத் தண்டிக்க வழி கோலும் சட்டங்கள், (இன்று வரையில்கூட நமது கிருமினல் சட்டங்களில் இதர சட்டங்களில் உள்ள பல்வேறு ஷரத்துக்கள்) செயல் பாட்டில் இருந்தன. அச்சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டன பிடிக்காத மத நம்பிக்கை கொணடவர்களை, அல்லது மத நம்பிக்கை இல்லாதவர்களைத் தண்டனைக் குள்ளாக்கினார்கள். 

மனிதனின் மனச் சான்றுகள் மீறப்பட்டன நிறுவபட்ட மாதா கோயில்கள் மூலம் சொகுசான சர்க்கார் உத்தியோங்களையும், அரசாங்கத்தின் சார்பில் வருவாய் வருவதற்கான வாய்ப்புகளையும்  ஆண்டவன் விதித்த கட்டளை என்பதன் பேரால் ஏதாவதொரு மதச் சாயலுடன் இணைத்துக் கொண்டார்கள். சர்ச்சும் அரசும் முழுமையாக  வேறுபடுத்தப்பட வேண்டும் இதைத்தான் நவீன அரசாங்கத்திடமிருந்தும், நவீன சர்ச்சுகளிடமிருந்தும் சோசலிஸ்டுப் பாட்டாளி வர்க்கம் கோருகிறது
-லெனின்
(நன்றி: நியூ செஞ்சுரியின் சிறுநூல் வரிசை,
‘சோசலிசமும் மதமும்’ எனும் நூல்.)


No comments:

Post a Comment