Friday, February 21, 2014

கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி பாக்கி

கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.2.46 லட்சம் கோடி: வரிபாக்கி

புதுடில்லி: கார்ப்பரேட்  நிறுவனங்கள் ரூ.2.46 கோடி வரி பாக்கி வைத்துள்ளன. அத்தொகையை வசூலிக்க வருமான வரித்துறை புதிய செயல் திட்டத்தை வகுத்துள்ளது.
இத்தகவலை மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஜே.டி.சீலம் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமைத் தெரிவித்தார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது: 2013 டிசம்பர் 31-ஆம் தேதி வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி பாக்கி ரூ.2,46,416 கோடியாகும், அதில் 45 நிறுவனங்கள் தலா ரூ.500 கோடிக்கும் மேல் வரி பாக்கி வைத்துள்ளன. 2013 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 3,139 சோதனைகளை மேற்கொண்ட வருமான வரித்துறை ரூ.5654 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது.2012-13 இடையிலான காலக்கட்டத்தில் 3889 சோதனைகளை மேற்கொண்டு 575.08 கோடி மதிப்பிலான சொத்துக்களையும் வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.
ஜனசக்தி
09-02-2014



No comments:

Post a Comment