ஒரு குறிப்பிட்ட வரலாற்றுப்
பிரிவினருக்கும், கலாசாரத்திற்குமிடையினுள், இணைப்பு என்பது (இனம்,மக்கள்,தேசம், அல்லது
கலாசார ஒற்றுமையம்சம் கொண்ட மக்கள் குழுக்கள்) கலாசாரத்திற்கு ஒரு பிரத்தியேகமான வடிவத்தைக்
கொடுக்கிறது. அது ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்புடன் உள்ள இணைப்பைக் காட்டுவதாக உள்ளது.
அதனுடைய வர்க்க நலன்கள் பிறவற்றையும் காட்டுவனவாக இருக்ககூடும்; முரண்பாடுள்ள சமுதாயத்தில்,
பல நியதிகளும், தராதரங்களும் ஆதிக்கத்தில் இருக்கக் காண்கிறோம். அவை அதிகார ஆதிகத்திலுள்ள
வர்க்கத்தின் நலன்களுக்கு ஏற்றனவாகவே உள்ளன.
இதற்கு நேர்மாறாக, எதிரிடையான, தனக்கே உரித்தான லட்சிய அமைப்புகளையும், நியதிகளையும்,
நியாத்தீர்ப்புகளையும், பழக்கவழக்கத்திற்கான கோட்பாடுகளையும் ஒடுக்கப்பட்ட வர்க்கம்
உருவாக்கிக் கொள்கிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில்
லெனின் கூறுவதை சுட்டிக்காட்டிலாம். “சுரண்டல் சமுதாய அமைப்புள்ள எந்தவொரு நாட்டிலும்,
அதன் தேசியக் கலாசாரத்தில் இரண்டு வகையான கலாசாரங்கள் இருக்கும். ஆளும் வர்க்கத்தின்
கலாசாரம் என்ற ஒன்றும், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் நலன்களோடு இணைப்புக் கொண்ட ஜனநாயக
சோஷலிச தன்மைகள் கொண்ட இன்னொன்றுமாக இருக்கும்’’
இந்த லெனினியக் கோட்பாடு,
கலாசாரத்தைப் பற்றிய சித்தாந்தத்தை மிகத் தெளிவாக, துல்லியமாகக் கூறுகிறது. இது சீர்திருத்தவாதிகளாலும்,
வலதுசாரி திரிபுவாதிகளாலும் தாக்கப்படுகிறது. அவர்கள் பூர்சுவா கலாசாரத்தை விமர்சனமின்றி
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர். ஏனெனில், கலாசாரத்தைப் பற்றிய வர்க்கக் கண்ணோட்டத்தை மேற்கொள்ள இவர்கள் தவறிவிட்டனர்.
வர்க்கக் கண்ணோட்டம் இல்லாது, இதுவரை இருந்த பூர்சுவா கலாசாரத்தைக்கூட நாம் ஜீரணித்துக்
கொள்ள வேண்டிய பிரச்சனையையும் இவர்கள் சந்திக்காமல் நழுவப் பார்க்கிறார்கள்.
தொழிலாளி வர்க்கம், பிற்போக்குக்
கலாசாரத்தை நிராகரிக்க வேண்டும். பூர்சுவா ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான இயந்திரங்களைப்
பயன் படுத்துவதை நியாயப்படுத்தக்கூடிய கலாசாரத்தையும் நிராகரிக்க வேண்டும். ஆனால்,
சகல நியாயமான கலாசார சாதனைகளும் உலகு தழுவிய மனிதகுல கலாசாரத்தை சோஷலிச சமுதாயத்தைப்
படைப்பதற்காக முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
எனவேதான் இளைஞர்களிடம் பேசுகிறபோது லெனின் மனிதகுலம் கலாசாரப்
பாரம்பரியமே ஆகும். இது புதிய கலாசாரத்தை-சோஷலிச சமுதாயத்தைப் படைப்பதற்காக முழுமையாகப்
பயன்படுத்தப்பட வேண்டும்.
எனவேதான் இளைஞர்களிடம்
பேசுகிறபோது லெனின் “மனிதகுலம் படைத்த அறிவுச் செல்வம் அனைத்தையும் கொண்டு உனது மூளையைச்
செழுமைப்படுத்திக் கொண்டால்தான், நீ ஒரு கம்யூனிஸ்டாக முடியும்” என்று கூறினார்.
- வி.கெல்லி,எம்.கவல்ஸோன்
- தமிழில் : தா.பாண்டியன்
(நன்றி : நியூ செஞ்சுரியின்
சிறுநூல் வரிசை
‘சமுதாயமும் பண்பாடும்’
எனும் நூல்)
No comments:
Post a Comment